குட்நியூஸ்.. இனி தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி.. விரைவில் புதிய போர்டல்..

768 512 21254695 861 21254695 1713433666257

தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படும் என்று கால்நடை பராமாரிப்புத்துறை தெரிவித்துள்ளது..

தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சுப்பையன் தெரிவித்துள்ளார். தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய போர்டல் தயாராக வருவதாகவும் அவர் தெரிவித்தார். முட்டை விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுவது போல, தினசரி அடிப்படையில் ஆட்டிறைச்சி, நாட்டுக்கோழி, கோழி இறைச்சி விலையை நிர்ணயம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


ஆடு, கோழி உயிருடன் என்ன விலை எனவும் தினசரி அப்டேட்டில் சொல்லப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த விலைப்பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து இறைச்சிக்கடைகளிலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஏற்றார் போல இறைச்சி விலை மாறுபட்டு இருக்கிறது. ஆனால் தற்போது ஒரே விலையில் ஆட்டிறைச்சி, கோழி விற்பனை செய்ய விலைப்பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில் இந்த போர்டல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Read More : நண்பர்களுக்கு Code Word-ல் மேசேஜ் அனுப்பிய நடிகர் கிருஷ்ணா.. டெலிட் ஆன குறுஞ்செய்திகளை மீட்டு போலீசார் விசாரணை..

RUPA

Next Post

பக்கவாதத்தின் 5 எச்சரிக்கை அறிகுறிகள்.. இதை புறக்கணிக்கவே கூடாது.. இல்லன்னா உயிருக்கே ஆபத்து..

Thu Jun 26 , 2025
பக்கவாதத்தின் 5 முக்கியமான அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.. உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்று பக்கவாதம். குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் அதிகமான இளைஞர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரித்து விரைவான நடவடிக்கை எடுப்பது ஒரு உயிரைக் காப்பாற்ற உதவும்.. இந்த அறிகுறிகளை அறிந்து செயல்படுவது வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையிலான வேறுபாட்டைக் குறிக்கும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பக்கவாதத்தின் 5 முக்கியமான […]
AA1Hrr8i

You May Like