குட் நியூஸ்..!! அம்மா உணவகங்களில் இனி பிடித்த உணவுகளை சாப்பிடலாம்..!! வெளியான முக்கிய தகவல்..!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு நாள் ஒன்றுக்கு மட்டுமே லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் தங்களின் பசியை போக்கிக் கொள்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா உணவகம் மூடப்படும் அல்லது பெயர் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக காலத்தில் இருந்தது போல தற்போது வரை அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில், அம்மா உணவகத்தை விட இன்னும் கூடுதலான பொதுமக்கள் பயனடையும் வகையில் சென்னையில் அம்மா உணவகத்தில் உணவு உட்கொள்பவர்களிடம் கருத்து கணிப்பு செய்யப்பட்டது. அதில் அம்மா உணவகத்தில் உணவு நல்ல முறையில் வழங்கப்படுகிறதா எனவும் வேறு ஏதாவது உணவு வகைகள் மாற்றம் செய்யப்பட வேண்டுமா எனவும் ஆலோசிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மதிய உணவில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும், குறைந்த விலையில் தேநீர் விற்பனை செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர். தமிழகத்தில் நிதி பிரச்சனையின் காரணமாக அம்மா உணவகங்களில் சிறிதளவு விலையேற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அம்மா உணவகத்தில் கூடிய விரைவில் மாற்றங்கள் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

CHELLA

Next Post

நீங்களும் ஆவின் பாலகம் அமைக்கலாம்..!! எப்படி தெரியுமா..? மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு..!!

Thu May 18 , 2023
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களை முன்னேற்றவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, நிலமற்றவர்களுக்கு பட்டா நிலம், வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு சிறு குறு தொழில்களை தொடங்குவதற்கான மானியம் உள்ளிட்ட பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், இத்திட்டங்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், முன்னின்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் ஆதிதிராவிடர் மற்றும் […]
22sa aavin 21feSA22 AAVIN.jpg

You May Like