விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் ஒன்றுதான் நீயா நானா. இன்னும் சொல்ல போனால் இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒன்று என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மக்களின் மனதில் தனி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை பிரபல முன்னணி தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார். தொடர்ச்சியாக பல சுவாரசியமான தலைப்புகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இந்த வாரம் திருமணத்திற்கு பின்னர் அம்மா பேச்சை கேட்டு நடக்கும் பெண்கள், அந்த பெண்களின் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று வந்தது.
இதில் பெண்கள் எதற்காக திருமணத்திற்கு பின்னர் அம்மா பேச்சைக் கேட்டு தங்களுடைய கணவர் அணியும் உடையிலிருந்து இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பது வரையில் முடிவு செய்கிறீர்கள்? என்று விவாதம் நடந்தது.
இதற்கு பதில் வழங்கிய பெண்கள் தங்களுடைய தாய் பாசத்தில் அப்படி சொல்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள். இதன் பிறகு கோபிநாத் அப்படி என்றால் உங்களுடைய கணவரின் தாய் அதாவது உங்களுடைய மாமியார் ஏதாவது சொன்னால் மட்டும் எதற்காக ஏற்க மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
ஆனால் அவருடைய இந்த கேள்விக்கு மீண்டும் முதலில் இருந்து தங்களுடைய அம்மா பாசத்தில் சொல்லுகிறார்கள் என்று தொடங்கிய பெண்களால் நொந்து கொண்ட கோபிநாத் நிகழ்ச்சியில் இருந்து ரிட்டையர்டு ஆகுறேன் என்று தெரிவித்து விட்டு நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே விளையாட்டாக வெளியேறினார். இந்த வீடியோ தற்சமயம் பரவி வருகிறது.