தனியார் இ – சேவை மையங்கள் முழுமையாக செயல்பட தொடங்கிய பின் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ – சேவை மையங்கள் மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அரசு இ – சேவை மைய ஊழியர்கள் கூறுகையில், தற்போது 511 அரசு இ- சேவை மையங்களும், 383 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களும் இருக்கிறது. இந்த மையங்களில் மொத்தமாக 1,110 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அரசு கேபிள் நிறுவனம் இம்மையங்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுப்பதில்லை. இந்த மையங்கள் அனைத்தும் மூடப்பட இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
10 ஆயிரம் தனியார் இ -சேவை மையங்களை மென்மேலும் முகமை இயக்ககம் அமைப்பது தான் இதற்கு காரணமாகும். அந்த மையங்கள் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தவுடன் அரசு மையங்கள் அனைத்தும் மூடப்படும் என கூறுகின்றனர். மேலும் அரசு மையங்கள் மூடப்பட்டால் 1,110 பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.