“ மூட நம்பிக்கைக்கு அரசு அதிகாரிகள் பணியக் கூடாது..” சென்னை உயர்நீதிமன்றம் கருத்து..

MPMADRASHIGHCOURT1

சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் பஜனைக்கோவில் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார்.. இவர் தனது வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு காளி, வீர பத்ரர் உள்ளிட்ட சிலைகளை வைத்து வழிபாடு செய்து வந்தார்.. மேலும் கார்த்திக் தனது வீட்டில் காளி சிலையை வைத்து மாந்திரீகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.. இதையடுத்து அப்பகுதியில் சிலர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் சிலையை எடுக்கக்கோரி வலியுறுத்தினர்.. தொடர்ந்து திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி தலைமையிலான வருவாய் துறையினர் காளி சிலையை அகற்றி கொண்டு சென்று விட்டனர்..


இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மீண்டும் தனது வீட்டில் காளி சிலை அமைப்பதற்கான உத்தரவை பெற்றார்.. கடந்த மாதம் காளி சிலையை மீண்டும் அதே இடத்தில் அவர் முயன்ற போது போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் மீண்டும் சிலைகளை எடுத்து சென்று விட்டனர்..

இந்த சூழலில் கார்த்திக் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது “ திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று சிலைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று மனுதாரருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஒலிபெருக்கிகளை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தார்.

ஒருவர் தனது வீட்டில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினால், பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது.. அரசு அதிகாரிகள் மூட நம்பிக்கைகளுக்கும், தவறான நம்பிக்கைகளுக்கும் பணிந்து செல்லக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.. கடவுளோ சிலைகளோ மனித இனத்துக்கு எந்த தீங்கும் ஏற்படுத்துவதில்லை என்றும் அது போன்ற நம்பிக்கைகள் மூடநம்பிக்கைகள், அது பக்தி இல்லை எனவும் நீதிபதி தெரிவித்தார்.. மேலும் இந்த வழக்கை முடித்து வைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Read More : 2026 தேர்தல் : தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? விஜய் யார் வாக்குகளை பிரிப்பார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்..!

RUPA

Next Post

அமெரிக்க தாக்குதலுக்கு பின் வெனிசுலா அதிபர் மதுரோ, அவரின் மனைவி கைது.. ட்ரம்ப் அறிவிப்பு..!

Sat Jan 3 , 2026
அமெரிக்கா வெனிசுலா மீது ஒரு விரிவான இராணுவத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதாகவும், அதன் விளைவாக அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது என்றும், மதுரோவும் அவரது மனைவியும் நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டனர் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். […]
trump maduro

You May Like