தூள்…! வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயில ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை…! அரசாணை வெளியீடு…!

money e1749025602177

இஸ்லாமிய மாணவ மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயில கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தலா ரூ.36 லட்சம் வீதம் ஆண்டுக்கு 10 பேருக்கு வழங்க ரூ.3.60 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.


வெளிநாடு சென்று படிக்க விரும்பும் சிறுபான்மையின மாணவர்களுக்கு தமிழக அரசு உதவி தொகை வழங்குகிறது. சிறுபான்மையின மாணவ, மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்புகளைப் படிப்பதற்கு உதவும் புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை கல்வி உதவித்தொகை என்றழைக்கப்படும் இந்தத் திட்டம், தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்டோர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு நிதி உதவித் திட்டமாகும். நிதித் தடைகளை நீக்கி, உயர்கல்வியை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த உதவித்தொகையானது, மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிச் செலவு, பயணச் செலவு மற்றும் பிற கல்வி சார்ந்த செலவுகளை ஈடுசெய்கிறது.

இந்தத் திட்டத்திற்காக ஆண்டுக்கு 10 மாணவர்களுக்கு தலா 36 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 3.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, கல்வி கட்டணம், விடுதி கட்டணம், பயணச் சீட்டு மற்றும் இதர செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க, மாணவர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும், மேலும் அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 6 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

முதுகலை படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் இளங்கலை படிப்பில் 60% மதிப்பெண்களும், முனைவர் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுகலை படிப்பில் 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் வெளியிடப்படும்.

Vignesh

Next Post

அனுமனுக்கு உகந்த சனிக்கிழமை வழிபாடு!. வெற்றிலை மாலை தரும் வெற்றி!. எத்தனை வைத்து கட்டலாம்?.

Sat Sep 6 , 2025
சனிக்கிழமை பெருமாளுக்கும், சனி பகவானுக்கும் உகந்ததாகும். சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட சனிக்கிழமையில் ராம பக்தரான அனுமனை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். சனிக்கிழமையில் அனுமனை எப்படி வழிபட வேண்டும்? சனிக்கிழமையில் அனுமனை எதற்காக வழிபட வேண்டும்? அப்படி வழிபடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். சனிக்கிழமைகளிலும் சனி ஓரை நேரத்திலும் அனுமனை வழிபட்டு வருவது அல்லல்களையெல்லாம் போக்கி அருளக்கூடியது. மனதில் பயத்தைப் போக்கக் கூடியது. […]
hanuman betel leaves

You May Like