நோட்…! அரசின் கல்வி உதவித்தொகை…! இந்த தேதிக்குள் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும்…! இல்லை என்றால் சிக்கல்…

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின மாணாக்கர்களுக்கான போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம்‌ 30.06.2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து மாவட்ட சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; 2022-2023ஆம்‌ கல்வியாண்டில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ செயல்படுத்தப்படும்‌ மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டம்‌ மற்றும்‌ மாநில அரசு சிறப்பு போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டங்களின்‌ கீழ்‌ விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக கல்லூரிகளுக்கான https://tnadtwscholarship.tn.gov.in/ என்ற இணையதளம்‌ மூலம்‌ 30.01.2023 அன்று முதல்‌ திறக்கப்பட்டு 31.05.2023 அன்று வரை கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம்‌ வழங்கப்பட்டது.

இந்நேர்வில்‌ சில மாணாக்கர்கள்‌ கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்காமல்‌ விடுப்பட்டுள்ளதால்‌ மாணாக்கர்களின்‌ கல்வி நலன்‌ கருதி 30.06.2023 அன்று வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள்‌ வருகிற 30.06.2023க்குள்‌ விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பிரபல விருது வென்ற இரண்டு எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து...!

Sat Jun 24 , 2023
பால சாகித்ய புரஸ்கார், யுவ சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் ‌. இது குறித்து தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ஆதனின் பொம்மையை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக பால சாகித்ய புரஸ்கார் பெற்றுள்ள எழுத்தாளர் உதயசங்கருக்கும், இளமையில் பசி எனும் வலியை நாஞ்சில் நாட்டு மொழியில் […]
6851c5bcb5f7fdf8d6821d780f4682941687513997215572 original

You May Like