பெரும் சோகம்..!! சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் கமல் படத்தின் தயாரிப்பாளர்..!! இவருக்கு இந்த நிலைமையா..?

உலக நாயகன் கமல்ஹாசனின் பெரும் வரவேற்பை பெற்ற “16 வயதினிலே” படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை தயாரித்தவர். பாரதிராஜாவை இயக்குநராக வெளி உலகுக்கு காட்டிய 16 வயதினிலே படத்தயாரிப்பாளர். தற்போது மருத்துவ செலவுக்கு கூட பணமில்லாமல் தவித்து வருகிறார். இவர் கன்னி பருவத்திலே, சுதாகர், கிழக்கே போகும் ரயில், பாண்டியன், ரேவதி நடித்த பொண்ணு புடிச்சிருக்கு உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

WhatsApp Image 2023 05 13 at 1.39.31 PM

எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு தற்போது 77 வயது ஆகிறது. இவர் சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டின் குளியல் அறையில் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தவறி விழுந்தார். இதில் அவரது கை, காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவ செலவுக்கு தேவையான பணம் இன்றி குடும்பத்தினர் சிரமப்பட்டனர். திரையுலகினர் சிலர் பண உதவி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து எஸ்.ஏ.ராஜ்கண்ணு மகள் பாமா “அப்பாவுக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது. அப்பா அறிமுகப்படுத்திய நடிகர் ராஜேஷ், நடிகை ராதிகா ஆகியோர் உதவி செய்தனர். கார்த்தி மருத்துவ செலவுக்கு பண உதவி செய்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

CHELLA

Next Post

மோரில் உப்பு சேர்த்து குடிப்பவரா நீங்கள்..? இவர்கள் கட்டாயம் அப்படி குடிக்கக் கூடாது..!! ஏன் தெரியுமா..?

Sat May 13 , 2023
கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மக்கள் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளவும், அதீத வெப்பத்தால் ஏற்படும் தாகத்தை தணிக்கவும் பல்வேறு பானங்களை குடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், வீட்டிலேயே எளிதில் தயாரிக்க கூடிய அதே சமயம் பலரின் விருப்பமான பானமாக இருக்கிறது மோர். ப்ரோட்டீன், கால்சியம், ரைபோஃப்ளேவின் போன்ற பல ஊட்டச்சத்துக்களை மோர் நமக்கு வழங்குகிறது. எலும்பு ஆரோக்கியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது போன்ற […]
மோரில் உப்பு சேர்த்து குடிப்பவரா நீங்கள்..? இவர்கள் கட்டாயம் அப்படி குடிக்கக் கூடாது..!! ஏன் தெரியுமா..?

You May Like