நாட்டில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது . அதிலும் குறிப்பாக குடும்ப வன்முறையின் காரணமாக பெண்கள் அவர்களது கணவன் மற்றும் மாமியாரால் தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் பல்வேறு விதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . அந்த வகையில் தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றிருக்கும் ஒரு சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. உத்திர பிரதேச மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் தனது கணவராலும் மாமியாராலும் பலமாக தாக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திர பிரதேச மாநிலம் ஃபருகாபாத் பகுதியைச் சார்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி ஓராண்டுகளான நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையடுத்து அவரது கணவர் அந்தப் பெண்மணியை செங்களால் பயங்கரமாக தாக்கி இருக்கிறார். இதில் அந்தப் பெண்மணியின் முகம் சிதைவடைந்து இருக்கிறது. மேலும் அவரது மாமியாரும் கணவரின் சகோதரரும் கட்டையால் முகத்தில் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்துள்ள அந்த பெண்மணி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.