குறைதீர் கூட்டம்…! இன்று காலை 11 மணி முதல்…! விவசாயிகள் யாரும் மிஸ் பண்ணிடாதீங்க..‌.!

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.


இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம் இன்று முற்பகல்‌ 11.00 மணியளவில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது.

எனவே தருமபுரி மாவட்டத்தைச்‌ சார்ந்த விவசாயிகள்‌ இக்கூட்டத்தில்‌ கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும்‌ கருத்துகளையும்‌ எடுத்துக்‌ கூறி பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் குறிப்பாக மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள், மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்பாக விவசாயிகளுக்கு ஏதாவது சந்தேகம் அல்லது குறைகள் இருக்குமாயின் அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதை தவிர்த்து கூதிய அளவில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவசாயிகள் எடுத்துரைக்கலாம்.

Vignesh

Next Post

நோட்‌.‌..! 2023 நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...! ‌ உடனே அப்ளை பண்ணுங்க...!

Fri Jan 27 , 2023
நீட் முதுகலை 2023 மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம், NBE ஆனது முதுகலை படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்காக பதிவு செய்ய இன்றே கடைசி நாள் என தெரிவிள்ளது. காலக்கெடுவிற்கு முன்பே natboard.edu.in இல் பதிவு செய்வதை உறுதிசெய்ய வேண்டும். காலக்கெடுவிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. காலக்கெடு முடிந்த பிறகு, விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய ஜனவரி 30 அன்று தொடங்கி பிப்ரவரி 3, 2023 […]
களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு

You May Like