தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் குறிப்பாக மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள், மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்பாக விவசாயிகளுக்கு ஏதாவது சந்தேகம் அல்லது குறைகள் இருக்குமாயின் அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதை தவிர்த்து கூதிய அளவில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவசாயிகள் எடுத்துரைக்கலாம்.