சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08- ம் தேதி அன்று நடைபெறவுள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்காகவும் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08.02.2023 அன்று பகல் 11.00 மணிக்கும், அதனை தொடர்ந்து மாவட்ட முப்படை வீரர் வாரியக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளது.
மேற்படி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் தங்களது கோரிக்கைகளை இரட்டைப் பிரதிகளில் விண்ணப்பம் வாயிலாக நேரில் சமர்ப்பிக்கலாம். இந்த குறைதீர் முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.