ஷாக் நியூஸ்.. GST-யில் புதிய மாற்றங்கள்.. எந்தெந்த பொருட்களின் விலை உயரும்..?

bloombergquint 2025 07

ஜிஎஸ்டி சட்டத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எந்தெந்த பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம்..

நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி சட்டத்தில் மத்திய அரசு விரைவில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. தற்போதுள்ள இழப்பீட்டு வரிக்கு பதிலாக இரண்டு புதிய வரிகளை அமல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.. ஒன்று சுகாதார வரி மற்றொன்று சுத்தமான எரிசக்தி வரி. இது சிகரெட், குளிர் பானங்கள், சொகுசு கார்கள் மற்றும் நிலக்கரி போன்ற பொருட்களின் விலையை நேரடியாக பாதிக்கும். இந்த புதிய மாற்றங்கள் அமலுக்கு வந்தால், இந்த பொருட்களின் விலை உயரும்..


எந்தெந்த பொருட்களுக்கு சுகாதார வரி விதிக்கப்படும்?

பொதுவாக சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படும் புகையிலை பொருட்கள், சிகரெட்டுகள் மற்றும் சர்க்கரை பானங்கள் போன்ற பொருட்களின் மீது சுகாதார வரி விதிக்கப்படும். இந்த பொருட்கள் ஏற்கனவே ஜிஎஸ்டியின் 28% வரி வரம்பில் வருகின்றன. இப்போது அவற்றின் மீது கூடுதல் சுகாதார வரி விதிக்கும் திட்டம் உள்ளது. எனவே இந்த பொருட்களின் விலை மேலும் உயரும்.. இதனால் மக்கள் அவற்றைத் தவிர்க்க ஊக்குவிக்கப்படுவார்கள். மேலும் அரசாங்கம் கூடுதல் வருவாயைப் பெற முடியும்.

சுத்தமான எரிசக்தி வரி

இரண்டாவது வரி – சுத்தமான எரிசக்தி வரி அதிக விலை கொண்ட வாகனங்கள் மற்றும் நிலக்கரி போன்ற மாசுபடுத்தும் எரிபொருட்கள் மீதான வரியை அதிகரிப்பதன் மூலம் சுத்தமான எரிசக்தியை நோக்கி நடவடிக்கை எடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியின் பசுமை இந்தியா கொள்கையுடன் தொடர்புடைய ஒரு படியாகக் கருதப்படுகிறது. இது மின்சார மற்றும் குறைவான மாசுபடுத்தும் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரி அடுக்கிலும் பெரிய மாற்றம்?

செஸ் வரி மட்டுமல்ல, 12% GST அடுக்கை நீக்குவது குறித்தும் மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. இது சில தயாரிப்புகளை மலிவான 5% வரி வரம்பிற்குள் கொண்டுவரும்., அதே நேரத்தில் சில பொருட்கள் 18% உயர் விகிதத்தில் சேர்க்கப்படும். பற்பசை போன்ற அன்றாடப் பொருட்களை மலிவான வரி வரம்பில் வரலாம்.. இருப்பினும், இது ஆரம்பத்தில் மத்திய அரசுக்கு ரூ.50,000 கோடி வரை சுமையை ஏற்படுத்தக்கூடும், ஆனால் விலைகள் குறைந்தால், நுகர்வு மற்றும் வரி வசூல் அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது..

GST வசூலால் அதிக வருவாய்

ஜூன் மாதத்தில் GST வசூல் 6.2% க்கும் அதிகமாக அதிகரித்து ரூ.1.85 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.. அதே நேரத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை சுமார் ரூ.1.74 லட்சம் கோடியாக இருந்தது. இருப்பினும், ஜூன் மாதத்தில் GST வசூல் மே மாதத்தில் ரூ.2.01 லட்சம் கோடியாகவும், ஏப்ரல் மாதத்தில் ரூ.2.37 லட்சம் கோடியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : விவசாயிகள் கவனத்திற்கு.. ரூ.2000 எப்ப கிடைக்கும்? லிஸ்டில் பெயர் இல்லன்னா என்ன செய்யணும்?

English Summary

Reports suggest that the central government has decided to bring new changes in the GST law. Which items will increase in price due to this?

RUPA

Next Post

ஆஹா!. குழந்தை பெறும் பள்ளி மாணவியர்களுக்கு ரூ.1 லட்சம் உதவி தொகை வழங்கும் அரசு!.

Sun Jul 6 , 2025
ரஷ்யாவின் சில பகுதிகளில், பள்ளி மாணவியர் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித்தொகை வழங்கி அந்நாட்டு அரசு ஊக்குவிக்கிறது. பொருளாதாரம், கலாசார மாற்றம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளிலும் குழந்தைபேறு குறைய துவங்கி உள்ளது. உலக மக்கள் தொகையில் முதலில் இருந்த சீனாவே தற்போது பின்தங்கிவிட்டது.சீனா மட்டுமின்றி ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் பிறப்பு […]
monday born baby 11zon

You May Like