அட்டகாசம்…! சாதிச் சான்றிதழ் வழங்குதல் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள்…! முழு விவரம் உள்ளே…!

நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குதல் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின்‌ சட்டம்‌ மற்றும்‌ நீதி அமைச்சகம்‌, நரிக்குறவன்‌, குருவிக்காரன்‌ சமுதாயத்தை தமிழ்நாட்டில்‌ 37-ஆவது இனமாக பழங்குடியினர்‌ பட்டியலில்‌ இணைத்து அறிவிக்கை வெளியிட்டது. அதனைத்‌ தொடர்ந்து, அந்த சமுதாயத்தினர்‌ அனைத்து அரசியலமைப்பு, பாதுகாப்பு மற்றும்‌ நலத்திட்டங்களைப்‌ பெற தகுதியடைய ஏதுவாக தமிழக அரசால்‌ ஆணை வெளியிடப்பட்டது.


பழங்குடியினர்‌ மக்களுக்கு சாதிச்‌ சான்றிதழ்‌ வழங்க அதிகாரம்‌ வழங்கப்பட்டுள்ள வருவாய்‌ கோட்டாட்சியர்கள்‌, சார்‌ ஆட்சியர்கள்‌ நரிக்குறவன்‌, குருவிக்காரன்‌ சமுதாய மக்களுக்கு பழங்குடியினர்‌ சாதிச்‌ சான்றிதழ்‌ வழங்குவதற்கு ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகள்‌ வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்‌ தற்போது மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ பிரிவிலிருந்து பழங்குடியினர்‌ பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள நரிக்குறவன்‌, குருவிக்காரன்‌ சமுதாயமக்களுக்கு பழங்குடியினர்‌ சாதிச்‌ சான்றிதழை மேற்காணும்‌ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழங்க சம்மந்தப்பட்ட அலுவலர்கள்‌ சான்றிதழை வழங்க வேண்டும்.

IMG 20230528 062558

Vignesh

Next Post

ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு...! இந்த தேதிகளில் தான் நடைபெறும்...! வெளியான அறிவிப்பு...!

Sun May 28 , 2023
இது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; செயல்முறைகள்‌ மூலம்‌ 2022- 2023 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள்‌ மற்றும்‌ பதவி உயர்வுகள்‌ சார்பாக திருத்திய கால அட்டவணைகள்‌ வெளியிடப்பட்டது. தொடக்கக்‌ கல்வி இயக்ககம்‌ சார்பாக கீழ்க்காணும்‌ திருத்திய கால அட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்‌ கலந்தாய்வு நடைபெறும்‌ என்பதை அனைத்து மாவட்டக்‌ கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tn Goverment staff

You May Like