ஹாங்காங் இளம்பெண்ணை கரம்பிடித்த புதுக்கோட்டை இளைஞர்.!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (31 வயது) என்ற நபர் ஹாங்காங் நாட்டில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருக்கு செல்சீ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் காதலாக மாறியது.


இருவரும் மிக நெருக்கமாக காதலித்து வந்த நிலையில் மணிகண்டன் தனது காதலை வீட்டில் கூறி சம்மதத்தை பெற்றார். அதுபோல ஹாங்காங் பெண் செல்சீயும் தனது வீட்டில் கூறி திருமணத்திற்கு சம்பந்தம் வாங்கினார். இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்தது.

செல்சியின் குடும்பத்தினரை மணிகண்டன் குடும்பத்தினர் மரியாதையுடன் அழைத்து வந்து புதுக்கோட்டை முத்து மாரியம்மன் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் முறைப்படி நடந்த திருமணத்தை ஹாங்காங் உறவினர்கள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.இந்த கலாச்சாரத்தில் திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக செல்சி தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

#காட்பாடி: உணவு விநியோகம் செய்யும் ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல்.!

Fri Jan 27 , 2023
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடைபெற்ற ஒரு சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து இருக்கின்றனர் மற்றொருவரை தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த தினமன்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உணவுப் பொருள்களை விநியோகம் செய்யும் ஊழியரான திருமலைவாசன் தனது பணியை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது இரு சக்கர வாகனம் எதிர் திசையில் வந்து […]
Food Delivery 1

You May Like