தொடங்கியது கனமழை!! இந்த மாவட்டத்திற்கு விட்டாச்சு லீவு!

தமிழகத்தில் சில இடங்களில் கனமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டள்ளது.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். நாளை (வெள்ளிக்கிழமை) மழையின் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதுமே பரவலாக அடுத்த இரு தினங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு சனிக்கிழமை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் அதி கனமழை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (11.11.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Next Post

ரோஹித் கண்கலங்கும் வீடியோ வைரல்!!

Thu Nov 10 , 2022
இந்தியா படுதோல்வியடைந்த நிலையில் கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கி நின்ற காட்சிகள் வைரலாகி வருகின்றது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 அரையிறுதி போட்டியில் இந்தியாதோல்வியடைந்தது. அடிலெய்டு மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. தோல்வியை தழுவியதால் ஒருவருக்கொருவர் ஆறுதல் படுத்திக் கொண்டு இடத்தை காலி செய்தனர். இந்நிலையில் அரங்கத்தின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு ரோகித் ஷர்மா தனியாக அழுது கொண்டிருந்தார். அவரை சமாதானப் படுத்த ராகுல்டிராவிட் சென்றார் என்ன கூறியும் கேட்காத ஷர்மா கண்கலங்கி […]

You May Like