மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. அந்தவகையில், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 வழங்கப்படுகிறது. இந்தப் பணம் 3 தவணையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது. தற்போது வரை 13 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 14-வது தவணை பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இன்னும் சில நாட்களில் 14ஆவது தவணை வழங்கப்படும் என்று தெரிகிறது. அதில் சிலருக்கு ரூ.4,000 கிடைக்க இருக்கிறது. 13ஆவது தவணைக்கு முன் அனைத்து விவசாயிகளையும் KYC சரிபார்க்க சொன்னது மத்திய அரசு. அதை செய்ய தவறியவர்களுக்கு 13ஆவது தவணை கிடைக்கவில்லை. அவர்களுக்கு தற்போது சேர்த்து வழங்கப்பட இருக்கிறது.