பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்தும் செய்தி.! அமைச்சர் திட்டவட்டம்.!

ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.


இதில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசிய போது, “புதிய கல்வி கொள்கை பற்றி தமிழக முழுவதும் ஆய்வு நடைபெற்ற முடிந்துள்ளது. தனியார் பள்ளி சங்கங்களின் துறை சார்ந்த கருத்துக்களும் கேட்கப்பட்டு வருகின்றது.

இது பற்றிய பணிகள் டிசம்பர் மாத இறுதியில் முடிவடையும். அதன் பின் ஜனவரியில் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அவர் ஆய்வு மேற்கொண்டு ஆணை வெளியிடுவார். தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயநிதி இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகத்தை மாற்ற நடவடிக்கை எடுப்பார்.

விளையாட்டு துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட இருக்கின்றன. முக்கியமாக குழந்தைகளின் விளையாட்டு நேரமான P.E.T பீரியடில் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் போன்ற வகுப்புகளை எக்காரணத்தை கொண்டும் எடுக்கக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

நள்ளிரவில் தனியாக சென்ற இளைஞருக்கு அரங்கேறிய கொடூரம்!

Sat Dec 17 , 2022
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நெட்டப்பாக்கம் அருகில் நள்ளிரவு நேரத்தில் ஒரு இளைஞர் மார்பில் குத்தப்பட்டு கழுத்தறு பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் இதை பார்த்துவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவம் பற்றி விசாரித்தனர். இதில் கொலை செய்யப்பட்டு கிடக்கும் இளைஞர் ராசிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான காமராஜ் என்பது தெரியவந்துள்ளது. காமராஜ் […]
cbe murder

You May Like