மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 9 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இவர் நான்காம் வகுப்பு படித்து இவருடைய பெற்றோர் மது குடித்துவிட்டு வந்து இரவில் அந்த சிறுமியை வெளியே துரத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அந்த சிறுமி தன்னுடைய தோழி வீட்டில் தங்கி இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, மதுரை குழந்தைகள் நல பாதுகாப்பு குழு நிர்வாகிகள் ஷோபனா, டயானா உள்ளிட்டோர் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர் இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் பேரில் அவனியாபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.