அட கொடுமையே…!விளையாட்டு துறை அமைச்சர் மீது பெண் பயிற்சியாளர் பாலியல் புகார்…!

விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பெண் பயிற்சியாளர் பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஹரியானாவில் விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பெண் பயிற்சியாளர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த பாலியல் குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பாக முதலமைச்சரிடம் தான் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .

image 2

எனது இமேஜை கெடுக்க முயற்சி நடக்கிறது. என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்குகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என நம்புகிறேன். விசாரணை அறிக்கை வரும் வரை விளையாட்டுத் துறையின் பொறுப்பை முதலமைச்சரிடம் ஒப்படைத்துள்ளதாக கூறினார்.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததுடன், அவை ஆதாரமற்றவை என்று குறிப்பிட்டுள்ளார். “எனக்கு நியாயமான விசாரணை வேண்டும். எனது இமேஜுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால் அது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். சம்பவம் குறித்து இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், எம்எல்ஏவும் ஆன 36 வயதான பாஜக தலைவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

Vignesh

Next Post

ஆம்லெட், ஆப்பாயில் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!!! முட்டை விலை வரலாறு காணாத உயர்வு...

Mon Jan 2 , 2023
நாமக்கல்லில் இருந்து தான் முட்டை, தமிழகம் முழுவதும் மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த முட்டையின் கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பிக்குழு நிர்ணயம் செய்து வருகிறது. கடந்த மாதம் டிசம்பர்23-31 வரை முட்டையின் கொள்முதல் விலை 5.50காசுகள் இருந்த நிலையில், நேற்றைய தினம் கொள்முதல் விலையில் 5 காசுகள் உயர்த்தி 5.55க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்முதல் விலை இன்று முதல் அமலுக்கு […]
Egg 1

You May Like