’’சிறு வயதில் யாரும் தப்பு பண்றதில்லையா?’’ பிரதீப் ரங்கநாதன் உருக்கம்…

யுவன் சங்கர் ராஜாவை திட்டி பதிவிட்டதாக நேற்று சர்ச்சை கிளம்பிய நிலையில் ’சிறுவயதில் யாரும் தப்பு பண்றதில்லையா?, நான் சில தவறுகளை செய்திருக்கின்றேன். அதற்காக மன்னிப்பு கோருகின்றேன். என விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ’லவ் டுடே’ திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். படம் வெளியானதில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் யார் என்றே தெரியாமல் இருந்த பிரதீப்பின் முகம் அனைவருக்கும் பரிட்சயமானது. முதல் படத்திலேயே நடிகராக மக்கள் மனதில் உட்கார்ந்துவிட்டார். எனவே வலைத்தலங்களில் கூட நேர்மறையான பதிவுகளே அதிக அளவில் குவிந்தது. இந்நிலையில் திடீரென நேற்று முன்தினம் ஃபேஸ்புக் ஸ்கிரீன் ஷாட் ஒன்று வைரலாகியது. பிரதீப் பயன்படுத்திய அந்த பேஸ்புக்கின் பழைய பதிவுகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சில நபர்கள் வைரலாக்கினர்.


அந்த ஸ்கிரீன் ஷாட்டில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை திட்டியது போன்று இருந்ததுதான் அந்த பதிவு. அதுமட்டுமின்றி கிரிக்கெட் பிரபலங்களையும் திட்டிய பதிவும் வெளியானது நடிகர் அஜீத் நடித்து வெளி வந்த மங்காத்தா திரைப்படத்தின் பாடல்கள் காப்பியடிக்கப்பட்டது என்பதையும் அவர் ஷேர் செய்திருந்தார். இது வைரலானது இவருக்கு ஒரு கறும்புள்ளியானது.

இந்நிலையில் இந்த பதிவுக்கு விரைவில் பதில் அளிப்பார் என எதிர்பார்த்திருந்ததபோது அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், ’’ தற்போது வைரலாகி வரும் ஃபேஸ்புக் பதிவுகள் பல பதிவுகள் போட்டோ ஷாப் செய்யப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தை நான் டி ஆக்டிவேட் செய்துவிட்டேன். விஷயங்களை மாற்ற முயற்சி செய்பவர்கள் மீது எனக்கு கோபம் கிடைாயது. மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கின்றார்கள் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. சில பதிவுகள் உண்மையானவை என்பதை நான் ஒப்புக்கொள்கின்றேன். கசப்பான வார்த்தைகள் போலியானவை. நானும் தவறு செய்துள்ளேன். சிறுவயதில் யாரும் தவறு செய்வதில்லையா? அதை நான் சரி செய்ய முயற்சி எடுத்து வருகின்றேன். ஒவ்வொரு நாளும் சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கின்றேன். ’’ என்று தெரிவித்துள்ளார்.

Next Post

மயக்க நிலையில் திருமணம்..!! ஆபாச வீடியோவை காட்டி மிரட்டல்..!! தூக்கில் தொங்கிய 17 வயது சிறுமி..!!

Thu Nov 17 , 2022
பெரம்பலூர் ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக இளைஞரின் உறவினர் மிரட்டியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த மணி என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி சிறுமியை ஆட்டோவில் கடத்திச்சென்று, சமயபுரம் கோவிலில் வைத்து கட்டாய தாலிகட்டிய நிலையில், இளைஞரிடம் இருந்து சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், […]
மயக்க நிலையில் திருமணம்..!! ஆபாச வீடியோவை காட்டி மிரட்டல்..!! தூக்கில் தொங்கிய 17 வயது சிறுமி..!!

You May Like