சாப்பிடும்போது முடியை விழுங்கிவிட்டீர்களா?. வயிற்றுக்குள் சென்றால் என்ன ஆகும் தெரியுமா?.

eat food hair

முடி என்பது ‘கெரட்டின்’ எனப்படும் ஒரு வகை புரதத்தால் ஆனது. இது நேரடியாக நம் உடலுக்குப் பெரிய தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால், முடியில் நாம் பயன்படுத்தும் ஷாம்புகள், சாயங்கள் அல்லது வெளிப்புறத் தூசுக்கள் படிந்திருக்கலாம். இவை உணவுடன் சேரும்போது, உணவின் தரத்தைக் கெடுத்து, குறிப்பாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளில், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் வளர வாய்ப்பை ஏற்படுத்தலாம்.


சாப்பிடும்போது தற்செயலாக ஒரு முடி வாய்க்குள் சென்றுவிட்டால், அது அடி நாக்கிலோ அல்லது தொண்டையிலோ சிக்கி உடனே ஒருவித குமட்டல் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சிலர் இதை வெளியேற்ற வேண்டும் என்ற பதட்டத்தில் விரல்களை விட்டு வாந்தி எடுக்க முயற்சி செய்வார்கள். ஆனால், அப்படிச் செய்வது தேவையற்ற சங்கடங்களையும் காயங்களையும் ஏற்படுத்தக்கூடும்.

தற்செயலாக அந்த முடி தொண்டைக்குள் இறங்கி வயிற்றுக்குப் போய்விட்டால் என்ன ஆகும் என்று பயப்படத் தேவையில்லை. நமது உடல் ஒரு வெளிப் பொருளை உள்ளே அனுமதிப்பதில்லை. வயிற்றுக்குள் சென்ற முடியை வெளியேற்ற, உடலின் இயற்கையான செயல்பாடுகள் தூண்டப்படும். இதன் ஒரு பகுதியாக, சில சமயங்களில் லேசான வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

இப்படி ஏற்படும் வயிற்றுப்போக்கை நிறுத்த மருந்துகள் அல்லது கை வைத்தியம் எதையும் உடனே செய்யக் கூடாது. பொதுவாக, வயிற்றுப்போக்குடன் சேர்ந்து முடி தானாகவே உடலில் இருந்து வெளியேறிவிடும். இது உடலின் ஒரு தற்காப்பு நடவடிக்கை. ஆனால், வயிற்றுப்போக்கு அளவு அதிகமாகி, உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் நிலை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பழங்காலத்தில் பாட்டி வைத்தியமாக, முடியை விழுங்கிவிட்டால் வெறும் சோற்றை பெரிய உருண்டையாக உருட்டி மெல்லாமல் விழுங்கச் சொல்வார்கள். அல்லது நெல்மணியை விழுங்கினால், முடி அதைச் சுற்றி வெளியேறிவிடும் என்று சொல்வார்கள். இவை சில சமயங்களில் உதவியிருக்கலாம் என்றாலும், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட வழிமுறைகள் அல்ல.

விழுங்கிய முடியை வெளியேற்ற இத்தனை முயற்சிகள் செய்வதை விட, உணவு சமைக்கும்போதும், பரிமாறும்போதும் சுகாதாரமாக இருப்பதும், சாப்பிடும்போது கவனத்தை வேறு பக்கம் திருப்பாமல் உணவின் மீது கவனம் செலுத்துவதும் மிகச் சிறந்தது.

Readmore: கொரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்..!! – அரசு அறிவுறுத்தல்

KOKILA

Next Post

கொரோனா பாதிப்பு... மாணவர்களுக்கு முக கவசம் கட்டாயம்...! அரசு அதிரடி உத்தரவு

Sun Jun 1 , 2025
மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஹாங் காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் மே மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் […]
covid 2025 1

You May Like