ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த காதலியை கட்டையால் அடித்து மண்டையை உடைத்த காதலனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், கடந்த 6 வருடங்களாக அஜின் என்பவரை காதலித்து வந்துள்ளார். கல்லூரி மாணவியான இவருக்கு கஞ்சா, மது போதை பழக்கம் இருந்துள்ளது. சில நாட்களாக அஜினுடன் இருந்த காதலை மாணவி குறைத்துக் கொண்டுள்ளார். மேலும், வேறு சில ஆண் நண்பர்களையும் தோழிகளையும் அழைத்து மது, கஞ்சா அடித்துக் கொண்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதுகுறித்து காதலன் கேட்டதால் அவரை விட்டு பிரிந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பர்ணட்டிவிளை பகுதியில் உள்ள பங்களா வீட்டில் இரவு அந்த மாணவி தனது ஆண் நண்பர்களான ஆகாஷ், மணிகண்டனை வரவழைத்து இரவு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அந்த பார்ட்டிக்கு தன் 2 தோழிகளையும் வரவழைத்துள்ளார்.
அதில், ஒரு மாணவிக்கு ஆண்களும் வருவார்கள் என்று தெரியவில்லை. மது குடிக்கும் ஆசை ஏற்பட்டதால், அந்த பார்ட்டிக்கு அந்த மாணவி ஒப்புக்கொண்டு இரவு 7 மணிக்கு சென்றுள்ளார். அங்கு மது மட்டுமல்லாமல், கஞ்சாவையும் அந்த மாணவியை வற்புறுத்தி புகைக்க வைத்துள்ளனர். இதனை அறிந்து அங்கு சென்ற அஜின், தனது காதலியும் அவரது தோழிகளும் ஆண் நண்பர்களுடன் மது போதையில் அரைகுறை ஆடையுடன் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், ஆத்திரமடைந்து அஜின், மரக்கட்டையை எடுத்துச் சென்று அவர்களை ஓடஓட விரட்டியதோடு காதலியின் தலையில் கட்டையால் ஓங்கி அடித்து மண்டையை உடைத்துவிட்டு தப்பியோடியுள்ளார். காதலி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது குளச்சல் போலீசாரிடம் அஜின் மீது புகார் அளித்தார். அந்த வீட்டை போலீசார் ஆய்வு செய்த போது புகைக்கப்பட்ட சிகரெட் துண்டுகள், ஆணுறைகளை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.