சித்தா டாக்டர் என்று வந்த ஒருவர் கதை பேசிக்கொணே 2 மணி நேரத்தை இழுத்தடித்துவிட்டார் என ராஜேஷ் தம்பி சத்யன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். இவரது உடல் வருகிற ஜூன் 1 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் கூறியுள்ளனர். ராஜேஷின் மகள் அமெரிக்காவிலிருந்து வர வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர். அவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ராஜேஷ் நெஞ்சுவலியால் இறக்கவில்லை. மருத்துவரின் கால தாமதம் தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ” காலையில் அண்ணன் என்னை அழைத்தார். நெஞ்சு வலிப்பதாக கூறவில்லை. இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை.. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக தெரித்தார். உடனே சித்தா மருத்துவரை வரவைத்தோம். 6.30 மணிக்கு வந்தவர் கதை பேசிக்கொண்டே 2 மணி நேரம் கடத்திவிட்டார்.
மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் அண்ணனை காப்பாற்றியிருக்கலாம். நாங்கள் தவறு செய்துவிட்டோம் என்றார். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் அடிக்கடி அண்ணன் மருத்துவமனைக்கு சென்று வருவார் எனவும் அவரின் சகோதரன் சத்யன் குறிப்பிட்டார். இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: பள்ளி ஆசிரியர் ‘TO’ 160க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்.. நிறைவேறாமல் போன நடிகர் ராஜேஷின் கடைசி ஆசை..!!