ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேல், ரஜினியின் 170 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.. இப்ப்டத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.. இப்படம் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இந்நிலையில் ரஜினியின் 170வது படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.. இந்த சூழலில் தலைவர் 170 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.. விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் ரஜினியின் 170-வது படத்தை இயக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் லைகா அறிவித்துள்ளது.. இப்படம் 2024 ஆண்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
இதனை தொடர்ந்து #Rajinikanth #Thalaivar170 ஆகிய ஹேஷ்டாகுகள் ட்ரெண்டாகி வருகின்றனர்.. இதனிடையே தலைவர் 170 படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் த.செ. ஞானவேல் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ மகிழ்வான தருணம்… புதிய பயணம் இனிதே ஆரம்பம்…” என்று குறிப்பிட்டுள்ளார்..