அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை….! காவிரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட முக்கிய தகவல்….!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவிரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்பிறகு சுமார் 3 மாத காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.


கடந்த 19ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காலை 4 மணி அளவில் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை சாற்றேற குறைய 5 மணி நேரம் நடைபெற்றது அதன் பிறகு அவர் மயக்க நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி என் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அவருடைய இதயத்தின் 4 அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து ஐசியூ வில் இருக்கிறார். வென்டிலேட்டர் கருவி நீக்கப்பட்டு இயற்கை முறையில் அவர் சுவாசிக்கிறார், மேலும் அவரது உடல்நிலை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று காவிரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Next Post

அவர் வேலை விட்டு அனுப்பினால் என்ன இங்க வாம்மா…..! அடுத்தடுத்து சர்மிளாவுக்கு குவியும் வேலை வாய்ப்புகள்…..!

Sat Jun 24 , 2023
கோவையில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திலும் முதல் பெண் ஓட்டுனராக பணியாற்றிய ஷர்மிளா நேற்று திடீரென்று தன்னுடைய வேலையை இழந்த நிலையில், அவருக்கு தற்போது பல்வேறு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிடமிருந்து அவருக்கு வேலை வாய்ப்பு குவிந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் ஷர்மிளாவை தனிப்பட்ட முறையில் தொலைபேசி மூலமாக அழைத்து வேறு வேலை மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறார். இதை தவிர ஷர்மிளா அதற்கு […]
kovai sharmila

You May Like