வீட்டிலே வளர்க்கும் காய்கறிகளில் புடலங்காயும் ஒன்று. இது ஆண்களுக்கு மிக அவசியமான ஒன்றாக முன்னோர்கள் கூறுகின்றனர். இந்த காயினை உண்டு வந்தால் ஆண்மை கோளாறுகளை குறையும்.
இது மட்டும் அல்லாமல் வயிற்று புண் மற்றும் தொண்டை புண் உள்ளவர்களுக்கும் புடலங்காய் பெரிய பலன்களை தருகிறது. மேலும் பாதிப்பையும் பெருமளவு குறைக்கிறது. புடலங்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது.
உடல் எடையை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது. மேலும் அஜீரண கோளாறு உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்து வருவதால் எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்குகிறது. இதனையடுத்து மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல ஒரு மருந்தாக செயல்படுகிறது.
அத்துடன் நரம்புகளுக்கு புத்துணர்வை அளித்து , ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தி கருப்பைக் கோளாறுகளையும் சரி செய்கிறது. கண் பார்வையின் திறனை அதிகரிக்கச் செய்கிறது.