நெஞ்சை பதைபதைக்கும் காட்சி..!! மண்டியிட்டுக் கொண்டே மரணித்த பக்தர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப்பிரதேசத்தில் கோவிலில் வழிபட்டு கொண்டிருந்தபோதே, பக்தர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது.


மத்தியப்பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மேஹானி. மருந்து கடை வைத்திருந்த இவர், ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தர். வியாழன் தோறும் சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு வந்துள்ளார். அங்கு சாய் பாபாவின் பாதங்களை பக்தர்கள் தலை வைத்து வணங்குவது வழக்கம்.

நெஞ்சை பதைபதைக்கும் காட்சி..!! மண்டியிட்டுக் கொண்டே மரணித்த பக்தர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

அப்போது, ராஜேஷ் மேஹானி முழங்காலிட்டு அமர்ந்து, பாபாவின் பாதங்களில் தலையை வைத்து வணங்கினார். 15 நிமிடங்கள் வரை ஆகியும் அவர் எழவில்லை. பின்னால் காத்திருந்த பக்தர்கள் அவரை தட்டி எழுப்பினர். ஆனால், அவர் எழாததை அடுத்து கோவில் நிர்வாகத்தினரை அழைத்தனர். அவர்கள் வந்து ராஜேஷை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் துாக்கிச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/iamnarendranath/status/1599019897870118912?s=20&t=6-s5yWYbUd0EUHaTz5-B6w

CHELLA

Next Post

தமிழக மக்களின் பேராதரவோடு முதல்வராகும் விஜய்..? கூட்டணிக்கு அழைப்பு..!! பரபரப்பு

Mon Dec 5 , 2022
தேனியில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், பல்வேறு இடங்களில் பரபரப்பான அரசியல் வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய், சினிமாவில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தேனியில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், […]
Vijay

You May Like