தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, 11 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனால் இன்று வட தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற இடங்களிலும் தென் தமிழகத்தில் ஊர் இரு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது.
அதன்படி செங்கல்ப்பட்டு மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழைபெய்து இயல்புநிலைக்கு திரும்பிய நிலையில், திடீரென இரவு நேர்த்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
செங்கல்பட்டு, மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
கோடை வெயில் அதிகளவில் இருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்த மழை வெப்பத்தை தனித்திருக்கிறது.ஆகவே மறுபடியும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் செங்கல்ப்பட்டு பகுதிகளில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. ஆகவே பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.