நாமக்கல்| கொட்டி தீர்த்த கனமழை குஷியில் பொதுமக்கள்…..!

நாமக்கல் நகர் பகுதிகளில் காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது இத்தகைய நிலையில், வெப்பத்தை தணிக்கும் விதத்தில், நாமக்கல்லில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது.


நாமக்கல் நகர பகுதிகளில் இருக்கின்ற கணேசபுரம் பேருந்து நிலைய பிரதான சாலை, கடைவீதி, ஆர்.பி. புதுர், தில்லைபுரம், கோட்டை சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது.

மாலை நேரத்தில் மழை பெய்ததால் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற எல்லோரும் நனைந்தபடி சென்றனர்.காலைமுதல் நாமக்கலில் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை சமயத்தில் 1 மணிநேரம் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Next Post

திருமண வரவேற்பு நிகழ்ச்சி..!! தாம்பூல பையில் மதுபானம்..!! அதிரடி நடவடிக்கை எடுத்த புதுச்சேரி கலால்துறை..!!

Fri Jun 2 , 2023
புதுச்சேரியில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையில் மதுபான பாட்டில் வழங்கிய விவகாரத்தில் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூல பையில் தேங்காய், பழங்களுடன் மது பாட்டிலும் அதனுடன் பிஸ்கட் பாக்கெட் வைத்து கொடுத்துள்ளனர். இது திருமணத்திற்கு வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்று இந்த நிகழ்விற்கு வந்த உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். […]
WhatsApp Image 2023 06 02 at 3.01.42 PM

You May Like