நாமக்கல் நகர் பகுதிகளில் காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது இத்தகைய நிலையில், வெப்பத்தை தணிக்கும் விதத்தில், நாமக்கல்லில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது.
நாமக்கல் நகர பகுதிகளில் இருக்கின்ற கணேசபுரம் பேருந்து நிலைய பிரதான சாலை, கடைவீதி, ஆர்.பி. புதுர், தில்லைபுரம், கோட்டை சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது.
மாலை நேரத்தில் மழை பெய்ததால் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற எல்லோரும் நனைந்தபடி சென்றனர்.காலைமுதல் நாமக்கலில் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை சமயத்தில் 1 மணிநேரம் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.