ஹேய்.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது..!! சரி டா..!! ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியுடன் பலமுறை உடலுறவு..!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஒன்னுபுரம் ஊராட்சி விநாயகபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆகாஷ் (24 ). இவர், காவல்துறை பணியில் சேருவதற்காக வேலூர் மைதானத்தில் உடற்பயிற்சி செய்ய தினந்தோறும் சென்று வந்துள்ளார். அப்போது அடுக்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்த துர்கா (21) இவரும் காவல்துறை பணியில் சேர்வதற்காக வேலூர் மைதானத்தில் பயிற்சிக்காக வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக பேசி வந்த இவர்களுக்கு நடுவே, காதலும் மலர்ந்துள்ளது. பின்னர், அந்த பெண்ணுக்கு பாலியல் ஆசையை தூண்டிவிட்ட ஆகாஷ், அவருடன் பலமுறை உடலுறவு வைத்துள்ளார். இதையடுத்து, சில நாட்கள் கடந்ததும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆகாஷிடம் கேட்டுள்ளார் அந்த இளம்பெண்.


நான் வேலைக்குச் சென்றதும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஆகாஷ். இதற்கிடையே, காதலி துர்காவிடம் பழகி வந்ததை மெல்ல மெல்ல குறைத்து கொண்டார் ஆகாஷ். இதனால் சந்தேகமடைந்த துர்கா, ஆகாஷின் செயல்பாட்டை கண்காணித்துள்ளார். அப்போது அவர் பள்ளி மாணவிக்கு காதல் வலை வீசியது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த துர்கா இதுகுறித்து ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஆரணி பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி தினமும் பள்ளிக்கு வந்து செல்லும்போது ஆகாஷ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஆகாஷ், அந்த மாணவிக்கு காதல் வலை வீசியுள்ளார். மாணவி பள்ளி முடிந்தவுடன் வழக்கம்போல் வீட்டிற்கு சென்றுள்ளார். வழியில் நின்று இருந்த ஆகாஷ் மாணவியின் கையைப் பிடித்து இழுத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கையை உதறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

பின்னர், வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். உடனடியாக மாணவியின் பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆகாஷ் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆகாஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

குழந்தைகளை வைத்துக் கொண்டே பிரபல டிவி நடிகருடன் உல்லாசம்..!! ரிசார்ட்டுக்கு வந்த கணவர்..!! பாய்ந்த துப்பாக்கி குண்டு..!!

Mon Jul 17 , 2023
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஜா தெர்மல் பவர் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரியும் சித்தார்த் தாஸ் (49) என்பவருக்கும், சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் கிரந்தி ஸ்மிதா (42) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். சித்தார்த்தும், ஸ்மிதாவும் தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து […]
Rape

You May Like