2 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – அமைச்சர் அறிவிப்பு!!

மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புதிய புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. இந்த மாண்டஸ் புயல் புதுவை -ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும், அவ்வப்போது 85 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக வட தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திராவில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இந்த மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது, கல்வி நிறுவனங்களுக்கும் அந்த இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று புதுவை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

Newsnation_Admin

Next Post

திடீரென்று படத்திலிருந்து விலகிய சாயாஜி ஷிண்டே! இயக்குனரின் புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர்!

Thu Dec 8 , 2022
திரைத்துறையில் இருப்பவர்கள் அவ்வப்போது சில பல தில்லுமுல்லுகளை செய்வது தற்போது வாடிக்கையாக்கி வருகிறது. ஆனால் இப்படியான தில்லுமுல்லுகளை செய்பவர்கள் திரைத்துறையில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தால், அவரை பகைத்துக் கொண்டு திரைத்துறையில் நாம் எதுவும் செய்து விட முடியாது என்ற நிலையில், பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளை பொறுத்துக் கொள்கிறார்கள். அதேநேரம் திரை துறையில் மிகப்பெரிய செல்வாக்கு இல்லாத சாதாரண நடிகர், நடிகைகள் ஏதாவது தவறு […]
shayaji shindey

You May Like