சென்னை சேப்பாக்கத்தில் கிளாண்டர்ஸ் தொற்று காரணமாக ஒரு குதிரை உயிரிழந்தது.. குதிரைக்க் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குதிரை உயிரிழந்தது.. நோய் தொற்றால் இறந்த குதிரை இருந்த பகுதியில் உள்ள அனைத்து குதிரைகளையும் பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது..
குதிரையின் கண், மூக்கு, காயத்தில் இருந்து வெளியேறும் திரவம் மூலம் இந்த நோய் மனிதர்களுக்கும் பரவும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கிளாண்டர்ஸ் நோய் பரவுவதால் குதிரை உள்ள பகுதியில் இருப்போர் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Read More : Swiggy, Zomato, Blinkit, Zepto ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு; அவர்களின் கோரிக்கைகள் என்னென்ன..?



