அனுமதி இல்லாமல் வீடுகளை வழிபாட்டு கூடமாக பயன்படுத்த முடியாது!. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

chennai high court 11zon

அரசின் முறையான அனுமதி இல்லாமல் வீடுகளை வழிபாட்டு கூடங்களாக (prayer halls) மாற்றி பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


திருவாரூர் மாவட்டம் கோடவாசல் பகுதியைச் சேர்ந்த ஆயர் எல். ஜோசப் வில்சன் என்பவர், 2024-ஆம் ஆண்டு, தம்முடைய வீட்டில் ஜெபக் கூட்டங்கள் நடத்துவதை தடுக்கும் வகையில் அந்த வீட்டின் மீது மாவட்ட தாசில்தார் சீல் வைக்க உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டிய நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், தனது சமீபத்திய உத்தரவில் “வீடு என்பது வழிபாட்டு கூடம் அல்ல; அதை அந்த வகையில் பயன்படுத்தும் முன், அரசு அனுமதி என்பது கட்டாயம். அனுமதி இல்லாமல் பொதுவழிபாட்டு கூட்டங்கள் நடத்த முடியாது.” அத்துடன், மனுதாரர் அளித்திருந்த “வழிபாடு அமைதியாக, ஒலிபெருக்கி இல்லாமல் நடத்தப்படும்” என்ற உறுதிமொழியையும் நீதிபதி நிராகரித்தார். “மனுதாரர் தன்னிச்சையாக, உரிமையாகக் கொண்டு, அனுமதி இல்லாமல் ஜெபக் கூடம் நடத்த முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

“ஒலிபெருக்கி மற்றும் மைக்ரோஃபோன் பயன்படுத்தப்படாதது மட்டும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. இந்த வழக்கின் மையக் கரு என்னவென்றால், மனுதாரர் ஒரு வீட்டை ஜெபக் கூடமாக மாற்றி, வழிபாட்டு கூட்டங்களை நடத்த முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். வீடு என்பது தனிநபரின் சொத்து என்றாலும், அதை சமூகவழிபாட்டு இடமாக மாற்றுவதற்கு அரசு அனுமதி தேவை.

மேலும், வழிபாட்டு கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்ற நிலையில், மனுதாரரின் வீட்டில் பதிக்கப்பட்ட சீலை அகற்ற மாவட்ட தாசில்தாருக்கு உத்தரவிட்டார். மேலும் மனுதாரர் அந்த வீட்டை ஜெபக் கூடமாக மாற்றுவதை விரும்பினால், அவர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் அனுமதி இல்லாமல் ஜெபக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றால், அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Readmore: தாக்குதலை முதலில் நீங்கள் நிறுத்துங்கள்; பிறகு போர் நிறுத்தம் குறித்து யோசிக்கலாம்!. ஈரான் அதிரடி அறிவிப்பு!.

KOKILA

Next Post

திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு...! வரும் 27-ம் தேதி சிறப்பு முகாம்...! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Tue Jun 24 , 2025
சேலம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.06.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும் சமூக அங்கீகாரத்தை அளித்து அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம் 2008-ல் அமைக்கப்பட்டது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற […]
Ration Card 2025

You May Like