போலி மசாலா பொருட்களை எப்படி கண்டுபிடிப்பது..? சில எளிய ட்ரிக்ஸ் இதோ..

மசாலா பொருட்கள் இல்லாமல் இந்திய சமையலே இல்லை என்று சொல்லலாம்.. உணவின் சுவையை அதிகரிக்க பல்வேறு மசாலா பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.. மிளகாய், மஞ்சள், தனியா, பட்டை, லவங்கம் என மசாலாப் பொருட்கள் இல்லாமல் தினசரி சமையலே இருக்காது.. சந்தையில் இந்த மசாலா பொருட்களுக்கு அதிக தேவை இருப்பதால், கலப்படமும் பெரிய அளவில் நடக்கத் தொடங்கியுள்ளது. எனினும் நம்மில் பலருக்கு அசல் மற்றும் போலி ஆகியவற்றை எவ்வாறு வேறுபடுத்துவது என்று தெரியாததால் நாம் அடிக்கடி அதை உட்கொள்கிறோம். போலி மசாலாப் பொருட்களைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

medi

மிளகாய் தூள்: பல வியாபாரிகள் செயற்கை வண்ணங்கள் அல்லது செங்கல் தூளை சிவப்பு மிளகாய் தூளில் கலக்கின்றனர்.. இந்த மிளகாய் பொடியை சாப்பிட்டால் வயிற்றில் கல் போன்ற கடுமையான நோய்கள் வரும். சுத்தமான சிவப்பு மிளகாயை சரிபார்க்க, அதை தண்ணீரில் போடுங்கள், உண்மையான சிவப்பு மிளகாய் என்றால் அது தண்ணீரில் மிதக்க ஆரம்பிக்கும்.. ஆனால் போலி மிளகாய் உடனடியாக மூழ்கிவிடும்.

மஞ்சள் தூள்: மஞ்சளை உட்கொள்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, ஏனெனில் இதில் மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் சிலர் மஞ்சளுடன் மெட்டானில் மஞ்சளைக் கலந்து விடுவார்கள். மஞ்சள் தூளில் சிறிது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைக் கலந்து அதன் தூய்மையைக் கண்டறியவும். இப்போது இந்த கலவையில் தண்ணீர் சேர்க்கவும். மஞ்சள் நிறம் இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் ஊதா நிறமாக மாறினால் அது போலி என்று அர்த்தம்..

கொத்தமல்லி அல்லது தனியா தூள்: பெரும்பாலான வியாபாரிகள் கொத்தமல்லி பொடியில் வேறு சில மாவு, கால்நடைகளின் உம்மி, மற்றும் களைகளை கலந்து விடுகின்றனர். ஆனால் அதை வாசனை செய்வதன் மூலம், உண்மையான மற்றும் போலிக்கு இடையிலான வித்தியாசத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம். உண்மையான கொத்தமல்லியின் வாசனை மிகவும் சக்தி வாய்ந்தது. போலி கொத்தமல்லி தூள் எனில், காட்டில் உள்ள செடிகள் போல் வாசம் வரும்.

இலவங்கப்பட்டை: சந்தையில் பலர் இலவங்கப்பட்டைக்கு பதிலாக கொய்யா மரங்களின் பட்டைகளை விற்கின்றனர். உண்மையான மற்றும் போலி இலவங்கப்பட்டை வேறுபடுத்தி அறிய, உங்கள் கையில் இலவங்கப்பட்டை தேய்க்க வேண்டும். நீங்கள் உண்மையான இலவங்கப்பட்டையைத் தேய்த்தால், உங்கள் கையில் ஒரு பழுப்பு அல்லது சிவப்பு குறி தோன்றும். போலி இலவங்கப்பட்டை எந்த நிறத்தையும் உருவாக்காது.

கருப்பு மிளகு: கருப்பு மிளகில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். சிலர் கருப்பு மிளகுக்கு பதிலாக பப்பாளி விதைகளை உலர்த்தி விற்பனை செய்கிறார்கள். கருப்பு மிளகை சரிபார்க்க, தண்ணீர் பயன்படுத்தவும். கருப்பு மிளகாயை தண்ணீரில் போடும் போது, உண்மையான கருப்பு மிளகு மூழ்கிவிடும்.. ஆனால், போலி கருப்பு மிளகு மிதக்க ஆரம்பிக்கும்.

1newsnationuser1

Next Post

மக்களே அபராதம் செலுத்த ரெடியா..? உடனே இதை செய்தால் தப்பித்துக் கொள்ளலாம்..!!

Sun Jan 29 , 2023
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கிறது. இதனால், இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையில் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். இதையடுத்து, மின் நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் […]
மக்களே அபராதம் செலுத்த ரெடியா..? உடனே இதை செய்தால் தப்பித்துக் கொள்ளலாம்..!!

You May Like