தொழில்நுட்ப வளர்ச்சி, நகர்மயமான வாழ்க்கை முறை மற்றும் பணிச்சுமை காரணமாக, சீனாவில் பல பெண்கள் கடும் மன அழுத்தத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த மனஅழுத்தத்திலிருந்து தற்காலிகமாக மீள்வதற்கான புதிய வழி ஒன்று, தற்போது அங்குள்ள முக்கிய நகரங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதுவே — “கட்டிப்பிடி வைத்தியம்” (Cuddle Therapy).
இதன் படி, பெண்கள் ஒரு சிறிய தொகையை செலுத்தி, தாங்கள் விரும்பும் ஆண்களை 5 நிமிடங்களுக்கு கட்டிப்பிடிக்க அனுமதிக்கின்றனர். இந்த சேவையின் விலை சுமார் 20 முதல் 50 யுவான், இந்திய மதிப்பில் ரூ.250 முதல் ரூ.600 வரை இருக்கிறது. இச்சேவையை வழங்கும் ஆண்கள் “Man Mums” என அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கான தனிப்பட்ட செயலிகள் இயங்கி வருகின்றன. இதில், பெண்கள் தாங்கள் விரும்பும் ஆண்களை அவர்களின் தோற்றம், நாகரிகம், உடல் கட்டமைப்பு, பொறுமை போன்ற அடிப்படைகளில் தேர்வு செய்து, முன்பதிவு செய்ய முடிகிறது.
வணிக வளாகங்கள், ரயில் நிலைய சுரங்கங்கள், பூங்காக்கள் என பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களிலேயே பெரும்பாலான சந்திப்புகளும் கட்டிப்பிடிக்கைகள் நடைபெறுகின்றன. இதனால் பெரும்பாலான பெண்கள் குறிப்பாக கல்லூரி மாணவிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள், தங்களது மன உளைச்சலை போக்க இது ஒரு மிகச் சாதகமான வழி எனக் கூறுகிறார்கள்.
இந்த சேவையை சமூக உளவியலாளர்கள் ஒரு மனநல தீர்வாக ஏற்கவேண்டும் எனக் கூறுகிறார்கள். இருப்பினும், இது ஒரு மனநல பிம்பத்தை வணிகரீதியில் மாற்றும் புதிய கலாசாரம் எனக் காணப்படுவது குறித்து சிலர் கவலையும் தெரிவித்துள்ளனர். இணையத்தில் “Man Mums” சேவையை தேடினால், பீஜிங், ஷாங்காய், குவாங்க்ஸூ போன்ற பெருநகரங்களில் இந்த சேவைக்கு எதிர்பாராத அளவுக்குப் பெரும் கோரிக்கை இருப்பது தெரியவருகிறது.