மகள் காதலித்து ஓட்டம்! ஒரே நாளில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட தாய் தந்தை!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் ஒன்றியம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீரபத்திர பூபதி மற்றும் சாந்தி தம்பதி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மகள்கள் இருவரையும் நாகப்பட்டினத்தில் உள்ள அரசு கல்லூரியில் படிக்க வைத்திருக்கின்றனர் பெற்றோர். இந்நிலையில் அவர்களது மூத்த மகள் கல்லூரியில் படிக்கும் சக மாணவரோடு காதலில் இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பெற்றோர் அந்த மாணவியை கண்டித்து இருக்கின்றனர். இதனால் பெற்றோர் மற்றும் மகளுக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அந்த மாணவி தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்திருக்கின்றனர் வீரபத்திர பூபதி மற்றும் அவரது மனைவி சாந்தி. இந்நிலையில் தங்களது வாழ்வை முடித்துக் கொள்ள நினைத்து அவர்கள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பகுதியில் உள்ளவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் மகளால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

சல்லி சல்லியா நொறுக்கிட்டயே மிட்செல்..! இந்தியாவுக்கு பயம் காட்டிய ஆஸ்திரேலியா...

Sun Mar 19 , 2023
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற […]
mitchel marsh1

You May Like