கணவன்-மனைவிக்கு இடையேயான வாய்வழி மற்றும் ஆசனவாய் உடலுறவு உள்ளிட்ட பாலியல் செயல்களை, இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 377-இன் கீழ் “இயற்கைக்கு மாறான குற்றங்களாக” வழக்குத் தொடர முடியாது என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதி மிலிந்த் ரமேஷ் பட்கே, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375-இன் கீழ் பாலியல் வன்கொடுமை என்பதன் விரிவான வரையறை மற்றும் தற்போதுள்ள நீதித்துறை முன்னுதாரணங்களின் அடிப்படையில் சட்ட நிலைமையை தெளிவுபடுத்தி, குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரிய மனுவை பகுதியளவு அனுமதித்தார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 375, ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக, அவளது சம்மதம் இல்லாமல், அல்லது வற்புறுத்தல்/பயத்தின் மூலம் பெறப்பட்ட சம்மதத்துடன் செய்யப்படும் பாலியல் செயல்களை உள்ளடக்கி, பாலியல் வன்கொடுமை குற்றத்தை வரையறுக்கிறது.
“ஆசனவாய் மற்றும் வாய்வழி உடலுறவு போன்ற செயல்களை உள்ளடக்கிய பாலியன் வன்கொடுமை விரிவாக்கப்பட்ட வரையறை மற்றும் திருமண உறவுகளுக்கு ஆதரவான சட்டப்பூர்வ விதிவிலக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திருமண உறவு நீடிக்கும் காலத்தில் கணவன்-மனைவிக்கு இடையே நிகழும் அத்தகைய செயல்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-இன் கீழ் குற்றம் சாட்ட முடியாது,” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375-இன் கீழ் பாலியன் வன்கொடுமையின் திருத்தப்பட்ட வரையறையானது, வாய்வழி மற்றும் ஆசனவாய் உடலுறவு செயல்கள் உட்பட பல்வேறு வகையான ஊடுருவல்களை இப்போது வெளிப்படையாக உள்ளடக்கியுள்ளது என்பதை அது குறிப்பிட்டது.
முன்னர் ‘இயற்கைக்கு மாறான குற்றங்கள்’ என வகைப்படுத்தப்பட்ட செயல்கள், இப்போது கற்பழிப்பு வரையறையின் எல்லைக்குள் வெளிப்படையாக இணைக்கப்பட்டுள்ளன,” என்று நீதிமன்றம் தெரிவித்தது…
திருமண விதிவிலக்கு முக்கியத்துவம்
நீதிமன்றத்தின் வாதத்தில் ஒரு முக்கிய காரணியாக இருந்தது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375-இன் விதிவிலக்கு 2 ஆகும். அதாவது, ஒரு கணவன் தன் மனைவியுடன் (சிறுமி அல்லாதவருடன்) செய்யும் பாலியல் செயல்கள் கற்பழிப்பாகாது என்று கூறுகிறது.
இதன் விளைவாக, திருமண விதிவிலக்கின் காரணமாக, திருமணத்திற்குள் சம்மதம் இல்லாமல் செய்யப்படும் பாலியல் செயல்களைக் கூட பாலியல் வன்கொடுமை என வழக்குத் தொடர முடியாது, எனவே அவற்றை பிரிவு 377-இன் கீழ் மறுவகைப்படுத்தவும் முடியாது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (1860) பிரிவு 377, வரலாற்று ரீதியாக, பரஸ்பர சம்மதத்துடன் நடைபெறும் ஓரினச்சேர்க்கை செயல்கள் உட்பட “இயற்கைக்கு மாறான குற்றங்களை” “இயற்கைக்கு எதிரான உடலுறவு” எனக் குற்றமாக்கியது.
“இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375-இன் விதிவிலக்கு 2-இன் படி, ஒரு கணவன் தனது மனைவியுடன் (சிறுமி அல்லாதவர்) கொள்ளும் உடலுறவு அல்லது பாலியல் செயல்கள் கற்பழிப்பாகாது. இதன் மூலம், அத்தகைய செயல்களைக் கற்பழிப்பாக வழக்குத் தொடரும் நோக்கத்திற்காக, திருமணத்திற்குள் சம்மதம் என்ற அம்சம் சட்டப்படி முக்கியமற்றதாகிறது,” என்று நீதிமன்றம் கூறியது.
கணவர் மீதான பிரிவு 377 குற்றச்சாட்டு ரத்து
கணவர் மீதான குற்றச்சாட்டுகள், மேலோட்டமாகப் பார்த்தாலும், திருமண உறவுக்குள் நடந்த செயல்கள் தொடர்பானவை என்று நீதிமன்றம் முடிவு செய்தது. அதன்படி, “இந்தக் குற்றச்சாட்டுகள், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377-இன் கீழ் ஒரு குற்றம் நடந்ததை மேலோட்டமாக வெளிப்படுத்தவில்லை,” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, நீதிமன்றம் கணவர் மீதான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377-இன் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரத்து செய்தது.
இருப்பினும், கொடுமை, தாக்குதல் மற்றும் வரதட்சணைக் கொடுமை தொடர்பானவை உட்பட, கணவர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான மீதமுள்ள குற்றச்சாட்டுகளில் தலையிட நீதிமன்றம் மறுத்துவிட்டது. வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகள், மருத்துவ ஆதாரங்கள் இல்லாமை மற்றும் பொய்யான குற்றச்சாட்டு போன்ற பிரச்சினைகள் விசாரணைக்குரியவை என்றும், அவற்றை ரத்து செய்யும் கட்டத்தில் தீர்க்க முடியாது என்றும் அது தெளிவுபடுத்தியது.
வழக்கின் பின்னணி
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு பெண், தனது கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது கொடுமை, வரதட்சணைக் கொடுமை, உடல்ரீதியான தாக்குதல், மற்றும் “இயற்கைக்கு மாறான செயல்கள்” உள்ளிட்ட பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
2023-ஆம் ஆண்டில், பிரிவுகள் 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்), 498-A (கொடுமை), 354 (பெண் மீதான தாக்குதல்) மற்றும் வரதட்சணைத் தடைச் சட்டத்தின் விதிகள் உள்ளிட்ட பல பிரிவுகளைப் பயன்படுத்தி ஒரு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.
திருமணத்தின் போது கணிசமான வரதட்சணை கொடுக்கப்பட்ட போதிலும், கணவரும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து கூடுதல் பணத்தையும் ஒரு மோட்டார் சைக்கிளையும் கோரியதாக அந்த பெண் குற்றம் சாட்டினார். மேலும், தனது கணவர் தன்னை வலி மற்றும் வேதனையை ஏற்படுத்தும் கட்டாயப் பாலியல் செயல்களுக்கு உட்படுத்தியதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டினார்.. தனது கணவர் மிரட்டல்கள் மற்றும் உடல்ரீதியான வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.. இது தொடர்பான வழக்கு விசாரணையில் தான் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது..



