கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணுடன் ஏற்பட்ட முறை தவறிய உறவு…..! இறுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்……!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஷரூர் நகர் பகுதியில் சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா(36). இவர் அந்த பகுதியில் உள்ள பங்காரு மைசம்மா ஆலயத்தில் பூசாரியாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், நற்குடா கிராமத்தைச் சேர்ந்த அப்சரா (30) என்ற பெண்ணுடன் பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.


இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. அடிக்கடி இருவரும் தனிமையும் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததால் அப்சரா கர்ப்பம் அடைந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, சாய் கிருஷ்ணாவின் கட்டாயத்தின் பெயரில் அப்சரா அந்த கர்ப்பத்தை கலைத்திருக்கிறார்.

சாய் கிருஷ்ணா தன்னை ஏமாற்றுவதை உணர்ந்து கொண்ட அந்தப் பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சாய் கிருஷ்ணாவை வற்புறுத்தி தொல்லை கொடுத்திருக்கிறார். ஆனால் ஏதேதோ காரணத்தை சொல்லி பூசாரி சாய் கிருஷ்ணா மறுப்பு தெரிவித்திருக்கிறார். இத்தகைய நிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருவரும் தனியாக சந்தித்துள்ளனர். அப்போது அப்சரா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மறுபடியும் வற்புறுத்தி இருக்கிறார்.

இதில் ஆத்திரம் கொண்ட சாய் கிருஷ்ணா, அப்சராவை கடுமையாக தாக்கி கொலை செய்திருக்கிறார். மேலும் உடலை சருர் நகர் எடுத்து வந்து கழிவு நீர் தொட்டியில் வீசிவிட்டு சென்றார். அதன் பிறகு எதுவும் தெரியாததை போல சாய் கிருஷ்ணா இருந்தார். இத்தகைய நிலையில், மகளை காணவில்லை என்று காவல்நிலையத்திப் அப்சராவின் பெற்றோர் புகார் வழங்கினர். இந்த புகாரை வழங்கும்போது சாய் கிருஷ்ணா உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சாய் கிருஷ்ணாவை சந்தேகத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சாய் கிருஷ்ணா வழங்கிய தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அப்சரா உடலை கைப்பற்றினர் அதன் பிறகு சாய் கிருஷ்ணா கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Post

பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த காதலன் படுகொலை…..! விரக்த்தியில் மனமுடைந்த காதலியும் தற்கொலை…..!

Sun Jun 11 , 2023
கோவை சுந்தராபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த் (21) லோடுமேன் ஆக இவர் பணிபுரிந்து வருகிறார் இவரும் செட்டிபாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறை சேர்ந்த தன்யா (18) என்ற பெண்ணும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர் இவர்களின் காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது. ஆகவே அவர்கள் சில வருடங்களுக்கு காத்திருக்குமாறு இருவரையும் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி தன்யாவுக்கு பிறந்தநாள் ஆகவே அவருக்கு […]
prashanth dhanya

You May Like