தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் ஆந்திரா வங்கியில், 15 நிறுவனங்களின் பெயரில் பல கோடி ரூபாயை ஒருவர் கடனாக பெற்றுள்ளார். இரண்டு வருடங்களாக அவர் பணத்தை செலுத்தி வந்த நிலையில், தனது கடனை புதுப்பிக்க முயன்ற போது, அவர் சமர்ப்பித்திருந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கி மோசடியில் ஈடுபட்ட 12 காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் மாவட்டத்திலிருந்து சுமார் 63 கிலோ மீட்டர் […]

பொதுவாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மட்டுமல்ல, ஆண் பிள்ளைகளை பெற்றவர்களும் தங்களுடைய பிள்ளைகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பான விஷயம்தான். ஆனால், அனைத்து விஷயங்களும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைப்பது மிக, மிக தவறு. அவரவருக்கு என தனி விருப்பு, வெறுப்பு இருக்கத்தான் செய்யும். அதை மதிக்காமல் ஒரு சிலர் செய்யும் செயலால் பல்வேறு இன்னல்கள் வந்து சேர்க்கிறது. அந்த வகையில், தெலுங்கானாவில், […]

நாடு ஒருபுறம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்று பல்வேறு விதங்களில் வளர்ந்து வருகிறது என்ற செய்தியை கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், இன்னொரு புறம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்று அனைத்து விதத்திலும், நாடு வளர்ந்து வந்தாலும், சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத மக்கள் இன்றளவும் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது சற்றே வேதனையாக இருக்கிறது. அதாவது, தெலுங்கானா மாநிலம், பாக்தாத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தை கர்ப்பிணி பெண் ஒருவருக்கு, […]

திருமணம் ஆகி நான்கு மாதங்களே ஆன நிலையில், புது மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை கொடூரமாக கொலை செய்த கணவன், விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தை சேர்ந்த தீபா மற்றும் பங்கர் குடவை சேர்ந்த அருண் ஆகிய இருவருக்கும், கடந்த மே மாதம் 11ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் நடந்த ஒரு வாரத்திலேயே மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அருண், […]

திருமணம் செய்து வைக்க தாமதம் செய்ததால், கடுப்பான இளைஞர், சொந்த தாய் என்று கூட பார்க்காமல், படுகொலை செய்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தை அடுத்துள்ள பண்டா மைலாரம் கிராமத்தில், ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில், மகனுக்கு திருமணம் செய்து வைக்க […]

ஒரு 10 அல்லது 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் விபத்துகள் நடைபெறுவது என்பது மிகவும் அரிதான விஷயங்களாக இருந்தது. ஒரு வருடத்தில் ஏதாவது ஒன்று, இரண்டு என தான் அப்போதெல்லாம் விபத்துக்கள் நடைபெறும். ஆனால், தற்போது நாள்தோறும் பல விபத்துக்கள் நடைபெறுகிறது. இன்னும் சொல்லப்போனால் விபத்துக்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ஏனென்றால் இரு சக்கர வாகனம் ஆனாலும் […]

தெலுங்கானா மாநிலம் மஞ்சரி மாவட்டத்தில் இருக்கின்ற கிஷ்தம்பேட் கிராமத்தை சேர்ந்தவர் பேஷம். இவருடைய மனைவி சங்கரம்மா இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகன் இருக்கிறார். கடந்த புதன்கிழமை கோழிக்கறி வாங்கி வந்த பேஷம் மனைவியிடம் கோழி குழம்பு வைக்குமாறு தெரிவித்து விட்டு சென்று விட்டார். ஆனால் சங்கரம்மா கோழி குழம்பு வைப்பதற்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு வைத்ததாக கூறப்படுகிறது. குடிபோதையில் வீடு திரும்பிய அவர் கோழி குழம்பிற்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு […]

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஷரூர் நகர் பகுதியில் சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா(36). இவர் அந்த பகுதியில் உள்ள பங்காரு மைசம்மா ஆலயத்தில் பூசாரியாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், நற்குடா கிராமத்தைச் சேர்ந்த அப்சரா (30) என்ற பெண்ணுடன் பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. அடிக்கடி இருவரும் தனிமையும் சந்தித்து […]

போலி பிறப்புச் சான்றிதழ் போலி இருப்பிட சான்றிதழ் போலி இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற்று பலர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவது வழக்கம்.சில மோசடிகள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல நேரங்களில் இது போன்ற மோசடிகள் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தவறு செய்பவர்கள் துல்லியமாக செய்து விடுகிறார்கள்.இது கூட பரவாயில்லை ஆனால் சில சமயங்களில் ஒரு சில காரணங்களை முன்வைத்து உயிரோடு இருக்கும் ஒருவர் தன்னைத் தானே […]

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கின்ற பாலாநகர் நர்சபூர் குறுக்கு சாலையில் வசித்து வருபவர் பில்லிபுரம் ஸ்ரீநிவாஸ்(35). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் காசிராம் மற்றும் மற்ற தொழிலாளர்களுடன் கட்டிட வேலை செய்து வந்திருக்கிறார். இதற்காக 1200 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் காசிராம் என்பவருக்கு 800 ரூபாய் மட்டுமே சம்பளமாக சீனிவாஸ் வழங்கி உள்ளார். நேற்று காலை நர்சபூர் நடைபாதையில் ஸ்ரீநிவாஸ் மற்றும் காசிராம் […]