“எனக்கு அரசியல் தெரியாது.. இதுதான் என் லட்சியம்..!” விஜய் சொன்ன மேட்டர்.. இப்படியும் பேசியிருக்காரா..?

vijay 1 1

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளார். கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியிலும், இரண்டாவது மாநாடு மதுரையிலும் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது திமுகவையும் பாஜகவையும் விமர்சித்து பேசினார்.


தொடர்ந்து மாவட்ட வாரியாக சனிக்கிழமை தோறும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் கடந்த 27ஆம் தேதி கரூருக்கு பிரச்சாரத்திற்கு சென்ற விஜயை பார்க்க வந்தவர்களில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூரில் விஜய் பார்க்க வந்தவர்கள் துடிதுடித்து உயிரிழந்து கொண்டிருக்க, விஜயோ களத்தில் நிற்காமல் சென்னை வந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. கரூர் சம்பவம் அந்த கட்சிக்கு பெரும் கரும்புள்ளியாக மாறியது.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்புகள் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியது. தொடர்ந்து விஜய்க்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விஜய்யின் அரசியல் மூவ், அவரது பெர்சனல் விஷயம் என பலவற்றை தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் வைரலான வீடியோ 2005 ஆம் ஆண்டும் நடந்தது. அப்போது தஞ்சாவூரில் 18 ஏழை பெண்களுக்கு விஜய் திருமணம் செய்து வைத்தார். அவரிடம் ரசிகர்கள் சிலர் ஒரு கேள்வியை முன்வைத்தார்கள். அதாவது அரசியலில் தளபதியாக உலா வருவீர்களா என்று கேட்டார்கள். அதற்கு பதிலளித்த விஜய், ‘எனக்கு அரசியல் தெரியாது. சினிமாவில் சிறந்த இடத்தை பிடிக்க போராடுவதே எனது லட்சியம்’ என்று பதிலளித்திருக்கிறார். இப்போது அந்த வீடியோக்களை பதிவிட்டு, ‘அவர் அப்போதே சரியாகத்தானே சொல்லியிருக்கிறார்’ என்று விமர்சனம் செய்துவருகிறார்கள்.

Read more: விவசாயிகளை கண்ணீரில் மூழ்கடித்த திமுக அரசு.. ரூ.50,000 நிவாரணம் வழங்க வேண்டும்.. நயினார் நாகேந்திரன் காட்டம்..

English Summary

“I don’t know politics.. this is my ambition..!” Vijay said matter.. did you notice this..!

Next Post

மழையில் வாகனம் ஓட்டுவோரின் கவனத்திற்கு..!! இந்த விஷயங்களை மறந்தால் இன்ஜினுக்கு ஈமச் சடங்கு தான் செய்யணும்..!!

Thu Oct 23 , 2025
2025 ஆம் ஆண்டும் பருவமழை காலம் தொடங்கிவிட்டது. பருவமழை குளிர்ச்சியையும் நிம்மதியையும் அளித்தாலும், சாலைகளில் வாகனம் ஓட்டும் சவாலையும் உடன் கொண்டு வருகிறது. நீர் தேங்கிய சாலைகள், போக்குவரத்து நெரிசல்கள், திடீர் பள்ளங்கள் ஆகியவற்றைக் கடந்து பாதுகாப்பாகப் பயணிக்க, சில விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். நீர் தேங்கிய சாலைகளைத் தவிர்ப்பது அவசியம் : முன்னால் செல்லும் வாகனம் பாதுகாப்பாக கடந்துவிட்டது என்பதற்காக, அதே பாதையைப் பின்பற்றி நாமும் செல்லலாம் […]
Rain Car 2025

You May Like