’இவரின் படங்களின் காட்சிகளை நிறைய திருடியுள்ளேன்’..!! மேடையில் ஓபனாக பேசிய வெங்கட் பிரபு..!!

லிங்குசாமி படங்களின் காட்சிகளை நிறைய திருடியுள்ளேன் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.


இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பெரும்பான்மையான படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதிலும், சமீபத்தில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நாக சைதன்யா நடிக்கும் அவரது 22-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கஸ்டடி படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு, நாக சைதன்யா, சரத்குமார், கீர்த்தி ஷெட்டி, பிரியாமணி, பிரேம் ஜீ, ராம்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெங்கட் வெங்கட் பிரபு, இது நாக சைதன்யாவை தமிழ்நாட்டுக்கு வரவேற்கும் நிகழ்ச்சி. நான் இயக்குனர் லிங்குசாமி படங்களின் காட்சிகளை நிறைய திருடியுள்ளேன். லிங்குசாமி இயக்கிய ‘ஜி’ படத்தை ஒன்றரை ஆண்டுகள் எடுத்தோம்.

அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். எனது மானசீக குரு லிங்குசாமிதான். இது எனது முழுநீள தெலுங்கு படம். நடிகர் நாக சைதன்யா பந்தா காட்டாதவர். நாயட்டு மலையாள படத்தை பார்த்து இன்ஸ்பையர் ஆகி இப்படத்தை எடுத்தேன். ரசிகர்களுக்காக சில கமர்ஷியல் காட்சிகளை கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன்” என தெரிவித்தார்.

CHELLA

Next Post

சென்னை விமான நிலையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 3 கிலோ தங்கம் பறிமுதல்…..!

Wed May 10 , 2023
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து நேற்று விமானம் சென்னைக்கு வந்தது. அப்போது அந்த விமானத்தில் இருந்த 3 ஆண் பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அவர்களை பரிசோதனை செய்ததில் 1.21 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ 304கிராம் தங்கத்தை அவர்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல ஹைதராபாத்தில் இருந்து வந்த ஒரு ஆண் பயணி 37 லட்ச ரூபாய் மதிப்பிலான 702 கிராம் தங்கத்தையும், […]
விமான நிலையத்தில் ஆடையை கழற்றி சோதனை..?? இளம்பெண் பரபரப்பு புகார்..!! நடந்தது என்ன...?

You May Like