”பாஜகவுக்காக இனி பிரச்சாரம் செய்ய மாட்டேன்”..!! நடிகை குஷ்பூ அதிரடி அறிவிப்பு..!!

நடிகை குஷ்பூ மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜக ஆதரவாளரான நடிகை குஷ்பூவும், கடந்த சில நாட்களாக கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் குஷ்பூ, திடீரென பிரச்சார பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் மற்றும் ஒருவரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று நான் அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் இருக்கிறேன். நான் என்னை பாஜகவுக்காக அர்ப்பணித்துள்ளேன்.

மேலும், எங்கள் அன்புக்குரிய பிரதமர் மோடியின் பாதையை பின்பற்றி வருகிறோம். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் மூழ்கிவிட்டேன். ஆனால், மிகவும் துரதிர்ஷ்டவசமாக எனது வாலெலும்பு காயம் காரணமாக நான் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். அதற்கு உடனடி கவனம் தேவைப்படும். விரைவில் குணமடைய உங்கள் அனைவரின் ஆதரவும் நல்லெண்ணமும் தேவை. மேலும் பலவற்றை செய்ய மீண்டும் திரும்பி வருவேன்” என தெரிவித்துள்ளார்.

Read More : மின் நுகர்வோருக்கு குட் நியூஸ்..!! உங்கள் வங்கிக் கணக்கிற்கு மீண்டும் பணம் வருகிறது..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

Chella

Next Post

மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!! டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!! எப்போது தெரியுமா..?

Mon Apr 8 , 2024
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.17 காலை 10 மணி முதல் ஏப்.19 இரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் ஜெ.ஜெயகாந்தன், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு […]

You May Like