ராமதாஸை சுற்றியுள்ள துரோகிகள் விலகும் வரை அவருடன் இணைய மாட்டேன்…! அன்புமணி திட்டவட்டம்

Anbumani 2025 1

சில துரோகிகளும், தீய சக்திகளும் என்னையும் எனது தந்தை ராமதாஸையும் பிரித்துவிட்டார்கள். ராமதாஸை சுற்றியுள்ள சில திமுக கைக்கூலிகள், துரோகிகள் அவரைவிட்டு விலகும் வரை அவருடன் இணையமாட்டேன் என தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நடைபெற்ற உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டத்தில் அன்புமணி அறிவிப்பு.


தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சியான பா.ம.க.வில் தற்போது அப்பா ராமதாஸ் – மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் எழுந்துள்ள நிலையில், அன்புமணி தரப்பில் கட்சிக்கு புதிய நிர்வாகி நியமனம் செய்வதும், அதை எதிர்த்து ராமதாஸ் நிர்வாகியை நியமிப்பது என கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மோதல்கள் அதிகரித்து வருகிறது. அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இதனால் பா.ம.க. அன்புமணி, பா.ம.க. ராமதாஸ் என இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே இவர்கள் இருவரையும் இணைக்க பலக்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது அன்புமணி ராமதாஸ் தனது அப்பா ராமதாஸூடன் இணைய மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நடைபெற்ற உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி; சில துரோகிகளும், தீய சக்திகளும் என்னையும் எனது தந்தை ராமதாஸையும் பிரித்துவிட்டார்கள். ராமதாஸை சுற்றியுள்ள சில திமுக கைக்கூலிகள், துரோகிகள் அவரைவிட்டு விலகும் வரை அவருடன் இணையமாட்டேன் என அன்புமணி அறிவித்துள்ளார்.

Vignesh

Next Post

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்..!! வீட்டிற்கு வரும் அதிகாரிகளிடம் தவறான தகவல் கொடுத்தால் ஜெயில் தான்..!!

Wed Nov 5 , 2025
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் (SIR) நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகித்து வருகின்றனர். இந்த பணிகள் நீதிமன்ற வழக்கு, அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட்களின் களப்பணி என பல்வேறு தளங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த சிறப்புத் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கணக்கெடுப்புப் […]
SIR 2025

You May Like