Ice Cream | தொடங்கும் கோடை காலம்..!! ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை அதிரடி உயர்வு..!! நாளை முதல் அமல்..!!

தமிழ்நாட்டில் பால்வளத்துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் சார்பாக பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பாலின் விலை உயர்ந்து வரும் நிலையில், தற்போது ஆவின் ஐஸ்கிரீம்களின் விலையும் மார்ச் 3ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு ஆவின் நிறுவனம் மூலம் சுமார் 31 லட்சம் லிட்டர் பால், 100-க்கும் மேற்பட்ட பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.5 வரை உயர்த்தப்பட உள்ளது.

அதாவது ஆவின் சாக்கோபார் ஐஸ்கிரீம் விலை ரூ. 5 உயர்ந்து 25 ரூபாய்க்கும், ஆவின் வெண்ணிலா பால் விலை 30 ரூபாய்க்கும் , வெண்ணிலா கிளாசிக் கோன் விலை 5 ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கும், கிளாசிக் கோன் சாக்லேட் 5 ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

Read More : Gautam Gambhir | ’எனக்கு அரசியலே வேண்டாம்’..!! பாஜகவில் இருந்து திடீரென விலகும் கௌதம் கம்பீர்..!!

Chella

Next Post

Registration | பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் இனி இந்த பிரச்சனை இருக்காது..!! வந்தாச்சு புதிய நடைமுறை..!!

Sat Mar 2 , 2024
தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் அடிக்கடி மக்களின் பயன்பாட்டை எளிதாக்குவதற்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, பத்திரப்பதிவுக்கு வரும் நபர்களின் வரிசைக்கு ஏற்ப டோக்கன் எண் வழங்கப்பட்டு நேரம் ஒதுக்கப்படும் நிலையில், இந்த வரிசையின்படி பதிவுக்கு செல்லும் நபர்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், வரிசைப்படுத்துதல் முறையில் தொடர்ந்து குழப்பம் இருப்பதால், வரிசையில் காத்திருக்கும் மக்கள் அனைவருக்கும் எளிதாக தெரியும் வகையில், புதிய நடைமுறையை அமல்படுத்தப்படும் என பத்திரப்பதிவுத்துறை […]

You May Like