தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா..? குஷ்பு சர்ச்சை பேச்சு…!

தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சைபோட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா? என குஷ்பு சர்ச்சை பேச்சு.

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம் நடத்தியது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை செங்குன்றத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் மனோகரன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பங்கேற்றார்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. போதைப்பொருளுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை., ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. தாய்மார்களின் பிரச்னையை தீர்த்து வைக்கவில்லை. தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சைபோட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா..? என கேள்வி எழுப்பினார்.

Vignesh

Next Post

தும்மல் வந்தால் கூட என்னை பதவி விலக சொன்ன ஸ்டாலின் போதைப்பொருள் விவகாரத்தில் இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன்?… EPS!

Tue Mar 12 , 2024
EPS: அ.தி.மு.க., ஆட்சியில், தனக்கு தும்மல் வந்தாலும், நான் பதவி விலக வேண்டும் என்று சொன்ன, இன்றைய முதல்வர் ஸ்டாலின், போதைப்பொருள் விவகாரத்தில் இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த, 110 கோடி ரூபாய் மதிப்பிலான, 100 கிலோ, ‘ஹசீஸ்’ என்ற போதைப்பொருளும், 874 கிலோ கஞ்சாவும், […]

You May Like