திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஒருவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொள்வது பலாத்காரம் ஆகாது என்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் நெருங்கி பழகிய பிறகு அவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏமாற்றிய நபர் மீது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அதாவது திருமணம் செய்து கொள்வதாக கூறி பொய்யான வாக்குறுதி கொடுத்து அந்த பெண்ணின் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொண்டால் அது பாலியல் பலாத்காரம் ஆகாது. எனவே, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கி ஒடிசா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.