ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரம் செய்தால் உங்கள் வாழ்விலும் செல்வம் பெருகும்..!! இரவில் இதை செய்ய மறந்துறாதீங்க..!!

god

தமிழ் கலாச்சாரத்திலும் ஆன்மீகத்திலும் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட கிரகத்திற்கும், தேவதைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை என்பது நவக்கிரகங்களின் நாயகனான சூரிய பகவானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் சூரியன் பலமாக இருந்தால் அரச யோகம், புகழ் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சூரிய பகவானின் அருளைப் பெற்று, வாழ்வில் முடங்கிக் கிடக்கும் அதிர்ஷ்டத்தை தட்டி எழுப்ப ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டிய சில எளிய பரிகாரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.


அதிர்ஷ்டம் தரும் பால் மற்றும் அரச மர வழிபாடு :

வாழ்வில் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு ஏற்பட, ஞாயிற்றுக்கிழமை இரவு உறங்கும் போது ஒரு சிறிய பாத்திரத்தில் பால் எடுத்து தலைமாட்டிற்கு அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் திங்கட்கிழமை அதிகாலையில் எழுந்து, அந்தப் பாலை சீமைக்கருவேல மரத்தின் வேரில் ஊற்ற வேண்டும். இது எதிர்மறை ஆற்றல்களை நீக்கி சுபிட்சத்தை வழங்கும். அதேபோல், ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் அரச மரத்தின் அடியில் மாவு மாவினால் செய்த நான்கு முக விளக்கை ஏற்றி, அதில் கடுகு எண்ணெய் ஊற்றி தீபமிடுவது பெரும் புகழையும், மகிழ்ச்சியையும் தேடித்தரும்.

ஆலமர இலை மற்றும் சூரிய அர்க்கியம் :

மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் கோரிக்கைகள் நிறைவேற, ஞாயிற்றுக்கிழமை ஆலமரத்தின் இலை ஒன்றில் உங்கள் விருப்பத்தை எழுதி, அதனை ஓடும் நீர்நிலைகளில் விடலாம். இது உங்கள் ஆசைகள் நிறைவேற வழிவகுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஞாயிறு அதிகாலையில் குளித்து முடித்துவிட்டு, செம்பு பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் குங்குமம் (ரோலி), மலர்கள், சர்க்கரை மிட்டாய் மற்றும் அட்சதை சேர்த்து உதய சூரியனுக்கு ‘அர்க்கியம்’ செய்வது (நீர் வார்த்து வணங்குவது) சூரியனின் நேரடி அருளைப் பெற்றுத்தரும்.

துடைப்பம் தானம் தரும் யோகம் :

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஞாயிற்றுக்கிழமை அன்று துடைப்பம் வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அன்று 3 புதிய துடைப்பங்களை வாங்கி வீட்டிற்கு வந்து, அடுத்த நாள் திங்கட்கிழமை காலையில் அதனை அருகில் உள்ள ஏதேனும் ஒரு கோவிலுக்கு தானமாக வழங்க வேண்டும். இந்த எளிய செயல் உங்கள் வாழ்வில் மூடிக்கிடக்கும் அதிர்ஷ்டக் கதவுகளைத் திறக்கும் ஆற்றல் கொண்டது என நம்பப்படுகிறது. சூரிய பகவானை முறையாக வழிபடும்போது, ஒருவரது வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறக்கும் என்பது திண்ணம்.

Read More : வீட்டில் நிம்மதி இல்லையா? அடிக்கடி மருத்துவ செலவுகள் வருகிறதா..? ஞாயிற்றுக்கிழமை அம்மனை இப்படி வழிபடுங்க..!!

CHELLA

Next Post

ஈரான் மீது வான்வழி தாக்குதல்..!! பறந்து வரும் ஏவுகணைகள்..!! குழந்தைகள் உள்பட 200 பேர் மரணம்..!! பெரும் பதற்றம்..!!

Sun Mar 1 , 2026
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த பகை, தற்போது ஒரு முழுமையான போராக உருவெடுத்துள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தின. இந்த திடீர் வான்வழி தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன. ஈரானின் அணுசக்தித் திட்டங்களை குறைக்க வேண்டும் […]
israel attack in iran

You May Like