’இதை செய்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்’..!! அமைச்சர் ஐ.பெரியசாமி புதிய அறிவிப்பு..!!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்ற சுமார் ஒரு லட்சம் பேர், உறுதிமொழி பத்திரம் வழங்கினால், அவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3,969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 14 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்து தற்போது வரை நகைக்கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்காததால் அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளது.

’இதை செய்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்’..!! அமைச்சர் ஐ.பெரியசாமி புதிய அறிவிப்பு..!!

இவர்கள் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் அவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். மேலும், சென்னை அண்ணாநகர், திருமங்கலம், திருநகர் உள்ளிட்ட 10 நியாய விலைக்கடைகள், கூட்டுறவு மருந்தகங்களில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெரும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் காய்கறி விலை உயர்வு ஏற்பட்டால் பசுமை பண்ணை காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

CHELLA

Next Post

இந்தியாவில் குறைய தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை...! நேற்று ஒரே நாளில் எத்தனை பேருக்கு பாதிப்பு...?

Tue Sep 27 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 3,230 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 32 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,255 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
COVID 1583870972

You May Like