நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனே தெரிவிக்க வேண்டுமெனவும் பணியாளர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்களுக்கு சுகாதாரம் குறித்த விஷயத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு ஏற்பட்டால் பணியிடத்தை விட்டு உடனடியாக வெளியேறுவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.