“ப்ளாட் பாரத்தில் அம்மாவுடன் தூங்கிய 3 வயது குழந்தை…..”! பிஞ்சு குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன் கைது!

மும்பையில் ரயில் நிலையத்தில் இருந்த மூன்று வயது குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நவி மும்பையில் உள்ள பன்வல் ரயில்வே ஸ்டேஷனில் தான் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அந்த ரயில்வே நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தனது தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தையை அப்பகுதியில் குப்பைகளை பொறுக்கும் ஒரு நபர் தூக்கிச் சென்று ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் வைத்து குழந்தையை வன்புணர்வு செய்து இருக்கிறான். குழந்தை அழும் சத்தம் கேட்கவே அதன் பெற்றோர்கள் எழுந்து பார்த்தபோது குழந்தை தொலைதூரத்தில் அழுது கொண்டு இருக்கிறது.

குழந்தையைப் பார்த்து பெற்றோர் சோதனை செய்தபோது குழந்தை வன்புணர்வு செய்யப்பட்டதை அறிந்த அவர்கள் இது தொடர்பாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இவ் வழக்கை விசாரித்த காவல்துறை சில மணி நேரங்களிலேயே அந்தக் குற்றவாளியை கைது செய்து கற்பழிப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது. தற்போது நாடெங்கிலும் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது பெற்றோர்களை பெரிதும் அச்சமடைய செய்திருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் கூட நாட்டில் அமைதியாக வாழ முடியாத ஒரு சூழ்நிலை உருவாகி வருகிறது.

Baskar

Next Post

முதல் பெண்டாட்டியின் ஃபோட்டோவை வைத்து அழத கணவர்! கடுப்பான இரண்டாம் மனைவி! கணவர் எடுத்த சோக முடிவு!

Tue Mar 7 , 2023
திருநெல்வேலியில் உள்ள பழைய பேட்டையில் இரண்டாவது திருமணமாகியும் முதல் மனைவியை நினைத்து ஏங்கி வந்த கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி பழைய பேட்டை சர்தார் புறம் நடுத்தெருவை சார்ந்தவர் நைனார் இவருக்கு வயது 40. இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும் 17 வயதில் சரண்யா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நயினார் மற்றும் அவரது […]

You May Like